Showing posts with label GENERAL STUDIES II. Show all posts
Showing posts with label GENERAL STUDIES II. Show all posts

பாலியல் சீண்டல்களுக்குச் சட்டத் தீர்வு என்ன?




# நாளிதழ் வினாக்கள் #UPSCTAMIL #GENERAL STUDIES 1


Metoo movement brings out the issue of sexual harassment, among many others. Analyze the lacunae in India’s sexual harassment laws and what needs to done?



நாடெங்கும் பரவிவரும் ‘நானும் இயக்கம்’ பல அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் நிலையில், நீதித் துறை சார்ந்து பலரிடமும் ஒரு கேள்வி ஒலிப்பதைக் கேட்க முடிகிறது: பொதுவெளியில் சொல்லப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளை சட்டத்தளத்தில் எப்படி எதிர்கொள்வது – சட்டப்படி உரிய தீர்வுகாண என்ன வழி இருக்கிறது?


சட்டத்தின் போதாமைகள்


உள்ளபடி நம்மிடம் 1997 வரை பொதுவெளிகளில் செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள்/கொடுமைகள் இவற்றைத் தடுப்பதற்கே சட்டங்கள் இல்லை என்பதுதான் உண்மை. உடல்ரீதியான தாக்குதல்களைத்

சுதந்திரமாகச் செயல்படுகிறதா சிபிஐ?

தவறு சிபிஐயிடம்(CBI) இல்லை; அரசு குறுக்கீட்டை நிறுத்துங்கள்

பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்திய நலன்களை நிலைநிறுத்தும் வகையிலும், சரியோ தவறோ, சட்டத்துக்கு உட்பட்டோ அல்லாமலோ என்று எந்த உத்தரவாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் வகையில் செயல்படும் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் நோக்கில் போலீஸ் சட்டம் – 1861 நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, போர் தொடர்பான செலவுகள் கடுமையாக அதிகரித்திருந்த நிலையில், நேர்மையற்ற சக்திகள் லஞ்சத்திலும் ஊழலிலும் ஈடுபடுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தச் சூழலுக்கு ஏற்ப செயல்படும் நிலையில், காவல் துறையும், பிற சட்ட அமலாக்க அமைப்புகளும் இல்லை என்று கருதப்பட்டது.

நிலைகுலைந்திருக்கும் சிபிஐ: கட்சி அரசியல் குறுக்கீடுகளிலிருந்து அமைப்புகளை விடுவியுங்கள்


# நாளிதழ் வினாக்கள் #UPSCTAMIL

'To be Free and neutral there is a need for Legislation for CBI' comment 

சிபிஐ சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். கருத்து தெரிவி 



Image result for CBI


நாட்டின் உயர் புலனாய்வு அமைப்பான சிபிஐக்குள் நடந்துகொண்டிருக்கும் அசிங்கங்கள் நாட்டையே அதிரவைத்திருக்கின்றன. ஒரு நள்ளிரவில் நடந்த திடீர் மாற்றங்கள் பல விஷயங்களை அம்பலமாக்கியிருக்கின்றன. சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இருவரும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு, பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு, அந்தப் பொறுப்புகள் புதியவர் ஒருவரின் கைகளில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் இடையேயான பனிப்போர் என்பதைத் தாண்டி, மோடி அரசு மீதான ரஃபேல் விமான பேர ஊழல் புகாரோடும் இந்த விவகாரம் தொடர்புபடுத்திப் பேசப்படுவது நாட்டின் உயர் அமைப்புகளிடம் மக்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மை மீதான மோசமான தாக்குதலாக மாறியிருக்கிறது.

திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக்கின் உருவாக்கம்

#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 2


Topic
Statutory, regulatory and various quasi-judicial bodies




1.How are the principles followed by the NITI Aayog different from those followed by the erstwhile planning commission in India? (UPSC CSE 2018)


இந்தியாவில் முந்தைய திட்டக் கமிஷனில் பின்பற்றப்பட்ட கொள்கைகளிலிருந்து , நிதி ஆயோக்கில் பின்பற்றப்படும் கொள்கைகள் எவ்வாறு வேறுபடுகிறது?(UPSC CSE 2018)



2. Examine the view that the idea of replacing Planning Commission by National Institution for Transforming India (or ‘NITI Aayog’) has given a completely new dimension to the process of development planning in the country (2017 IFos Mains GS)

திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக்கின் உருவாக்கம்  நாட்டில் வளர்ச்சித் திட்டமிடல் செயல்முறைக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்ற கருத்தை ஆராயுங்கள்? (2017 IFos Mains GS)


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  

contact mail ID  tnpscprime@gmail.com


Examine
ஆய்வு செய்



இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்




திட்டக் குழு


இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். 2014 இல், தனது முதல் சுதந்திர தின உரையில், பிரதம மந்திரி நரேந்திர மோடி, திட்டக் குழு கலைக்கப்படும் என்று அறிவித்தார். திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.


இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவு


#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 2


“India’s relations with Israel have, of late, acquired a depth and diversity, which cannot be rolled back.” Discuss. (UPSC 2018)

"இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகள் தாமதமாக ஆரம்பித்து  ஆழமாகவும், பன்முகத்தன்மையுடனும், திரும்ப பெற இயலாததாக உள்ளது ." விவாதி (UPSC 2018)


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்




மோடியின் இஸ்ரேல் பயணத்தால் இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்?


மோடியின் இஸ்ரேல் பயணத்தை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றோ.. முன்னோடியானது என்றோ சிலர் பாராட்டக்கூடும். இது மோடியின் தனிப்பட்ட ராஜதந்திரச் செயல்முறையாலும் இஸ்ரேல் பதிலுக்கு அளித்த சிறப்பான உபசரிப்பாலும்தான் சாத்தியமானது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்துக்கே வந்து,

இந்திய நிதி ஆணையம்(FINANCE COMMISSION) என்றால் என்ன? அல்லது நிதிக்குழு - என்றால் என்ன?



#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 2




How is the Finance Commission of India constituted? What do you know about the terms of reference of the recently constituted Finance Commission? Discuss. (UPSC 2018)


இந்தியாவின் நிதி ஆணையம் எவ்வாறு அமைக்கப்பட்டது? அண்மையில் அமைக்கப்பட்ட நிதி ஆணையத்தின் Terms of Reference (TOR)பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? விவாதியுங்கள். (UPSC 2018)





மத்திய அரசிடம் உள்ள அதிக நிதி வருவாயிலிருந்து மாநில அரசுக்குத் தேவையான நிதிகளை வழங்க பரிந்துரை செய்வதுதான் நிதிக்குழு. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான நிதி ஏற்றத்தாழ்வு எல்லா கூட்டாட்சிகளிலும்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்துவதைப் பற்றிய சமீபத்திய சர்ச்சை


#UPSC பழைய வினாக்கள்

 In the light of recent controversy regarding the use of Electronic Voting Machines (EVM), what are the challenges before the Election Commission of India to ensure the trustworthiness of elections in India? (UPSC 2018)  


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்.) பயன்படுத்துவதைப் பற்றிய சமீபத்திய சர்ச்சையின் வெளிப்பாடாக, இந்தியாவில் தேர்தல் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் முன் சவால்கள் எவை?(UPSC 2018)



மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic voting machine) சில நாடுகளில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் வாக்கைப் பதிவு செய்ய நடைமுறையில் இருக்கும் கருவியாகும். பதிவான தகவல்களைச் சேமித்து வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும். தற்போது இந்தியா, பிரேசில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

CBI என்பது என்ன?


#அடிப்படை கற்றல் #UPSCTAMIL


மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி உருவானது, அதன் நோக்கங்கள் – செயல்பாடுகள் என்ன, அது எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்ற கதை இந்தியர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது, சுவாரஸ்யமானது.

எப்படி உருவானது சிபிஐ?

மிக முக்கியமான ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், முறைகேடுகள், பயங்கரவாதச் செயல்கள் போன்றவற்றை விசாரிக்கும் நாட்டின் முன்னணி விசாரணை நிறுவனம், ‘மத்தியப் புலனாய்வு அமைப்பு’ (சிபிஐ). இரண்டாவது உலகப் போர் சமயத்தில், போருக்குத் தேவையான கொள்முதல்களில் லஞ்சம், இதர முறைகேடுகள் நடந்ததால் அரசு ஊழியர்களை விசாரிக்கத் தனி அமைப்பாக ‘சிறப்பு போலீஸ் பிரிவு’ ஒன்று 1941-ல் ஏற்படுத்தப்பட்டது. அதுவே 1.4.1963-ல் உள்துறை அமைச்சகத் தீர்மானத்தால் ‘சிபிஐ’ என்ற புதிய பெயரால் அழைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது.


சிபிஐ இயக்குநர் தேர்வு எப்படி?


மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி, சிபிஐ அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்படுவார். இவருடைய பதவிக் காலம் இரண்டாண்டுகள். ஊழல் கண்காணிப்பு, விழிப்புணர்வுத் துறைச் சட்டப்படிதான் சிபிஐ தலைமை இயக்குநர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாட்டின் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய உயர்நிலைக் குழு, சிபிஐ தலைமை இயக்குநரைத் தேர்வுசெய்கிறது. அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லாத சூழலில்,  அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் உறுப்பினராக உரிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


உள்கட்டுமானம் எப்படி?


சிபிஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வராது. பணியாளர் நலத் துறையின் கீழ்தான் வருகிறது. கடின உழைப்பு, நடுநிலைமை, நேர்மை ஆகியவை சிபிஐயின் லட்சியங்கள். தலைமையகம் டெல்லியில் இருக்கிறது. இதன் சார்பு அமைப்பான சிபிஐ அகாடமி என்ற பயிற்சிப் பிரிவு உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ளது. 2017 மார்ச் 1 நிலவரப்படி இந்த அமைப்புக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 7,274. நிரப்பப்பட்ட இடங்கள் 5,685. காலியிடங்கள் – 1,589 (21.84%).


சிபிஐ அதிகாரிகள் தேர்வு எப்படி?


சிபிஐயில் தலைமை இயக்குநர் தவிர, உள்ள இதர அதிகாரப் பணியிடங்களுக்கு ஐபிஎஸ், ஐஆர்எஸ் துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். தவிர, மாநிலக் காவல் துறைகளிலிருந்தும் வருமானவரித் துறை, சுங்கத் துறைகளிலிருந்தும் அயல்பணி அடிப்படையில் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர். பெரும்பாலானவர்கள் ‘எஸ்எஸ்சி’ என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பொதுத் தேர்வு நடத்தி வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர்.


பணிப் பிரிவுகள் என்னென்ன?


ஊழல் விசாரணை, சிறப்புக் குற்றச் செயல்கள், பொருளாதாரக் குற்றங்கள், கொள்கை – சர்வதேச ஒத்துழைப்பு விவகாரங்கள், சிபிஐ நிர்வாகம், வழக்கு தொடுப்பதற்கான இயக்ககம், மத்திய தடயவியல் ஆய்வுக்கூடம் என்று ஏழு பெரும் பிரிவுகள் சிபிஐக்குள் உள்ளன.


சிபிஐயின் நிறுவனத் தலைவர் யார்?


சிறப்பு போலீஸ் பிரிவாக இருந்தபோது, 1955 - 1963 காலகட்டத்தில் செயல்பட்டவர் டி.பி.கோலி. அவரே சிபிஐயின் முதல் தலைமை இயக்குநராகவும் 1963-1968 காலகட்டத்திலும் தொடர்ந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் எஃப்.வி.அருள், சி.வி.நரசிம்மன், டி.ஆர்.கார்த்திகேயன், ஆர்.கே.ராகவன் ஆகியோர் சிபிஐ இயக்குநர்களாகப் பொறுப்பு வகித்துள்ளனர்.


சிபிஐயின் சிறப்பதிகாரம் என்ன?


தேர்தல் ஆணையம்போல அரசியலமைப்புச் சட்டரீதியிலான உருவாக்கத்தைப் பெற்றதல்ல சிபிஐ. தன்னாட்சி, சுதந்திரம் என்றெல்லாம் பேசப்பட்டாலும், பெரும்பாலும் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே அது செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு முக்கியமான காரணம் இதுவே. எனினும், சிபிஐ பல சிறப்பதிகாரங்களைப் பெற்றிருக்கிறது. ஓர் உதாரணம், சிபிஐ விவகாரங்களைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியாதபடி இது விலக்கு பெற்றுள்ளது. விசாரணையை எல்லாம் ரகசியமாக முடித்துவிட்டு, கைகளில் துருப்புச் சீட்டுகள் கிடைத்த பின் வெளிப்படையான விசாரணையைத் தொடங்குவது சிபிஐயின் உத்திகளில் ஒன்று.


பெரிய குற்றச்சாட்டு என்ன?


மாநில அரசு எப்படிக் காவல் துறையை ஆட்டுவிக்கிறதோ, அப்படி மத்திய அரசின் ஆட்டுவிப்புக்கு ஏற்ப சிபிஐ ஆடும் என்பதுதான்.முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, லாலு பிரசாத், முலாயம் சிங், மாயாவதி போன்ற பலர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்த விதம் இக்குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் விதத்திலேயே இருந்தன. பாஜக தலைவர் அமித் ஷா சம்பந்தப்பட்ட சோராபுதீன் என்கவுன்டர் வழக்கு இந்த ஆட்சியில் அந்தக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வழக்குகளில் ஒன்று.


தீர்வு என்ன?


சிபிஐ அமைப்பின் தன்னாட்சி, சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அரசியலமைப்புச் சட்டரீதியிலான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். ஆளுங்கட்சியின் அழுத்தங்களிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டும்.

பாகிஸ்தான்: புதிய அரசும் பழைய பிரச்சினையும்

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg



General Studies- II

Topic :Bilateral, regional and global groupings and agreements involving India and/or affecting India’s interests

நன்றி : இந்து தமிழ்


பாகிஸ்தான்: புதிய அரசும் பழைய பிரச்சினையும்


பாகிஸ்தான் பிரதமராக பி.டி.ஐ (தெஹ்ரீக் இ- இன்சாப்) கட்சித் தலைவர் இம்ரான் கான் பதவியேற்றிருக்கும் நிலையில், அவரது வெற்றியின் பின்னணி குறித்து விவாதங்கள் நடந்துவருகின்றன. இதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசடியான தேர்தல் இது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. “அதிகாரங்களின் கைகளிலேயே நீதி

‘ஆர்செப்’ பிராந்திய வர்த்தகப் பேச்சுவார்த்தை

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg

நன்றி : இந்து தமிழ்

General Studies-II: 

Topic : Bilateral, regional and global groupings and agreements involving India and/or affecting India’s interests


பிராந்திய வர்த்தகப் பேச்சில் இந்தியா தொடர வேண்டும்!

இந்தியா உட்பட 16 நாடுகள் ‘ஆர்செப்’ எனப்படும் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ‘ஆசியான்’ அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளும் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரிய குடியரசு ஆகிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த நாடுகளின் பட்டியலில் உள்ள 6 நாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

’’பாதுகாவலர்’’களே வேட்டைக்காரர்களாக மாறும் போது

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg

General Studies-II: 

Topic–  Welfare schemes for vulnerable sections of the population by the Centre and States and the performance of these schemes; mechanisms, laws, institutions and Bodies constituted for the protection and betterment of these vulnerable sections.

Expected Question:  

The recent incidents of rampant physical and sexual abuse of minors and women in childcare institutions (CCIs) and shelter homes in Bihar and Uttar Pradesh reveal how the state as well as the civil society have failed in their role as protectors and watchdogs. Comment. (250 words)

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள். contact mail ID  tnpscprime@gmail.com

நன்றி : Economic and Political Weekly

காப்பகங்களில் வாழும் ஆதரவற்றோரை பாதுகாக்க வேண்டிய தங்களது கடமையிலிருந்து அரசும், குடிமைச் சமூகமும் தோல்வியடைந்துவிட்டன.


சமத்துவமற்ற, ஆணாதிக்க சமூகத்தில் நிலவும் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரச் சுழல்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற எளிதில் பலியாகக் கூடிய நிலையில் உள்ள பிரிவினர்களுக்கு கொடூரமான மனம் படைத்தவர்களிடமிருந்து பாதுகாப்பு தேவை. ஆனால் இவர்களை பாதுகாக்க வேண்டிய மக்கள் நல அரசும், குடிமைச் சமூகமும் தங்களது நிறுவனங்களின் மூலம் இவர்களை பாதுகாக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் பீகாரிலும், உத்திர பிரதேசத்திலும் உள்ள குழந்தைக் காப்பகங்களில் பெண்களும் சிறார்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் தொடர்ச்சியாக ஆளானது அரசும், குடிமைச் சமூகம் பாதுகாவலர்கள் என்ற தங்களது பணியை ஆற்றுவதில் தோல்வியுற்றிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பல சமயங்களில் ‘’பாதுகாவலர்களே’’ குற்றமிழைப்பவர்களாக இருப்பது என்பது நீதியின் சிதைவு மற்றும் அபத்தம். சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 (ஜெஜெ சட்டம்) இயற்றப்பட்ட பிறகும், குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இருந்தும் இது நடந்துள்ளது.

எல்லைகளை விரிக்கும் நீதித் துறை



டந்த நவம்பர் 29-ல் சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி ‘என்கவுண்டர்’ வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், விசாரணை நடவடிக்கைகளைச் செய்தியாக வெளியிடுவதற்குத் தடை விதித்தது. 2007-ல் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் வெறுப்பூட்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கிலும்கூட அலகாபாத் உயர் நீதிமன்றம் இதைப் போல தடை விதித்திருந்தது. அதையடுத்த சில நாட்களிலேயே வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக சிபிஐ சிறப்பு நீதிமன்றமும் இப்படியொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதித் துறை, செய்தித் தணிக்கையை

கூட்டாட்சி

UPSC தமிழில் (UPSC in Tamil ) Telegram  லிங்க் https://t.me/joinchat

General Studies-II:

Topic:  Functions and responsibilities of the Union and the States, issues and challenges pertaining to the federal structure, devolution of powers and finances up to local levels and challenges therein.

Expected Question for UPSC  exam (Tamil): 

1.In your opinion, what are the ingredients of true cooperative federalism? In India, how can the union government help foster true federalism? Critically discuss.


2.The post of the Governor, by constitutional design, acts as a check upon both federalism and popular democracy. Critically comment.(250 words) 


3) What are the structural problems that the Indian federalism faces today? What are the consequences of these problems? Has time come to allow each state to have its own model of governance, bureaucracy and local governments? Comment.


மருத்துவக் காப்பீடு திட்டம்: போதாமைகளைக் களைய வேண்டும் அரசு!

GENERAL STUDIES- II:


TOPIC: 
Issues related to health


Expected Question for UPSC  exam (Tamil): 


What is Jan Arokya Yojana?Removing the Loopholes in the Insurance Scheme We can Achieve Free Medical Facility to All.Analyze.

ஜன் ஆரோக்ய யோஜனா என்றால் என்ன?காப்பிட்டு முறைகளில் உள்ள போதாமைகளை கலைவதன் மூலம் அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற இலக்கை அடைய முடியும் பகுப்பாய்வு செய்.

ஒரு நாடு ஒரே தேர்தல்(SIMULTANEOUS ELECTION)

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg



General Studies-II: 

Topic: Parliament and State Legislatures – structure, functioning, conduct of business, powers & privileges and issues arising out of these. 

Expected Question: 

1. Examine the merits and demerits of conducting simultaneous elections for Lok Sabha and Assembly


2. Analyze the feasibility of holding simultaneous election in India in the near future?



1.மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கு ஒரே நேரத்தில்  தேர்தல் நடத்தினால் ஏற்படும்  நிறை  மற்றும் குறைகளை  ஆய்க.



2.எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்.




கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்.


contact mail ID  tnpscprime@gmail.com


நன்றி : இந்து தமிழ்

ஒரே நேரத்தில் தேர்தல்(SIMULTANEOUS ELECTION) : மத்திய அரசு கைவிட வேண்டிய கோரிக்கை


மக்களவைத் தேர்தலையும் மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசும் பாஜக தலைவர்களும் கோரிவந்த நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமற்றது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு: மெக்ஸிகோவின் துணிச்சல் முடிவு!

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg

நன்றி : இந்து தமிழ்

General Studies- II

Topic : Effect of policies and politics of developed and developing countries on India’s interests, Indian diaspora.




உலக வர்த்தகம் தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், ஆறுதல் அளிக்கும் வகையில் அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்படிக்கையைச் செய்துகொண்டிருக்கிறது மெக்ஸிகோ. பல ஆண்டுகளாக அமலில் இருந்த ‘வட அமெரிக்கத் தடையற்ற வர்த்தக உடன்பாடு’ (நாஃப்டா) கைவிடப்பட்டு, இருதரப்பு வர்த்தக உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா விதித்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டதுடன், அந்நாடு விரும்பிய சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இது எதிர்மறையான விளைவுதான் என்றாலும், வெளிவர்த்தகத் துறையில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு இது ஒரு மாற்றாக இருக்கும் என்று நம்பலாம்.

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN