‘நானும் இயக்கம்': (#ME TOO) அத்துமீறுவோர்க்கான எச்சரிக்கை





# நாளிதழ் வினாக்கள் #UPSCTAMIL




#Metoo movement in India reflects the patriarchy that is deep rooted in Indian culture. Critically Analyze.(250 words)


இந்தியாவில் 'நானும் இயக்கம்'(#மீ டூ ) இந்திய கலாச்சாரத்தில் ஆழ்ந்த வேரூன்றியிருக்கும் ஆணாதிக்கத்தை பிரதிபலிக்கிறது.விமர்சனரீதியான பகுப்பாய்வு. (250 வார்த்தைகள்)



What do you understand about #Metoo and #timesup movement? Evaluate whether these movements take us closer towards gender equality?(250 words)



#Metoo மற்றும் #timesup இயக்கம் பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?இந்த இயக்கங்கள் நம்மை பாலின  சமநிலை சமுதாயதிற்கு அருகில் கொண்டு செல்கின்றனவா ? மதிப்பீடுக (250 வார்த்தைகள்)





Critically comment

விமர்சன ரீதியான கருத்து


நீங்கள் கருத்து தெரிவிக்கும்போது, ​​நீங்கள் உங்கள் முக்கிய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும், உங்கள் பரந்த வாசிப்பில் இருந்து தோன்றிய சான்றுகள் அல்லது வாதங்களை அடிப்படையாகக் கொண்டு உங்கள் கருத்துக்களை வழங்க வேண்டும். 
விமர்சன ரீதியான கருத்தும் உங்கள் முக்கிய கருத்தை உருவாக்குவதுதான் ஆனால் இறுதியில் நீங்கள் ஒரு நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும்.
Evaluate
மதிப்பிடுங்கள்
நீங்கள் மதிப்பீடு செய்யப்படும்பொழுது, கேள்வியின் அடிப்படையிலோ அல்லது ஆதாரங்களின் அடிப்படையிலான தலைப்பு பற்றிய உண்மையைப் பற்றிய தெளிவான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். 
இங்கே ஒரு தனிப்பட்ட கருத்தும் கூறவேண்டும்  



அமெரிக்காவில் தொடங்கி உலகெங்கும் பரவி இந்தியா வந்தடைந்திருக்கும் ‘நானும் இயக்கம்’ (மீடூ), அரசியல், சினிமா, ஊடகம் என்று பல்வேறு துறைகளிலும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைப் பதம்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. மக்களின் ஊடகம் ஆகிவிட்ட சமூக வலைதளங்களில் தத்தமது பாதிப்புகளைப் பகிரங்கமாக எழுதிவருகிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள். இதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தன்னுடைய பதவியை இழந்திருப்பது அத்துமீறுவோர்க்கான எச்சரிக்கை  சார்ந்து நல்ல தொடக்கம் என்று சொல்லலாம்.
பெண்களின் பாதுகாப்பு என்பது சமூகத்தின் முழுப் பொறுப்பு. ஆனால், சமூகத்தின் விளிம்பிலேயே பெண்களுக்கான பாதுகாப்பு இருக்கிறது. உலகிலேயே அதிகமாகப் பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்று நம்முடையது. பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ள முடியாத ஒரு பெண், வீட்டுக்கு வெளியே காலடி எடுத்து வைக்கவே முடியாது என்ற சூழலையே நாம் நம் பெண்களுக்கு அளித்திருக்கிறோம். வளர்ந்த நாடுகளில் இவற்றை அம்பலப்படுத்த அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள், பாலியல் குற்றச்சாட்டுகள் அணுகப்படும் தீவிர நிலை இங்கே கிடையாது என்பதுதான் உண்மை. இதனாலேயே பாதிக்கப்பட்டிருந்தாலும், வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருப்பவர்களே அதிகம். இத்தகைய சூழல் உலகளாவிய போக்காகப் பரவிவரும் ‘நானும் இயக்கம்’ இதுநாள் வரை பெண்கள் சுமந்துவந்த கனத்த மௌனத்தை உடைத்துக் கடக்க ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. பலரும் தங்களுடைய பாதிப்புகளைத் துணிச்சலாக வெளியே பேசிவருகின்றனர்.
அக்பர் மீதான குற்றச்சாட்டுகள் இவற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு அமைச்சர் என்பதற்கு முன்னதாக நாடறிந்த பத்திரிகையாளர் - எழுத்தாளர்களில் ஒருவர் அவர். சமூகத்தின் எல்லாத் தரப்புகளையும் விமர்சித்தவர். சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்தவர். ஆனால், பணியில் தனக்குக் கீழே இருந்தவர்களிடம் எப்படியான பாலியல் சீண்டல்களை, தாக்குதல்களை அவர் நிகழ்த்தினார் என்பதைப் பெண் பத்திரிகையாளர்கள் வரிசையாகச் சொல்லத் தொடங்கியபோது, அதிகாரத்தைப் பயன்படுத்தி, பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் மூன்றாம்தர ஆள் ஒருவருக்கும் அக்பருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற எண்ணமே எழுந்தது. இன்றைக்கு அவர் அமைச்சராகவும் இருக்கும் நிலையில், ஆளும் பாஜக அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் சுற்றிலும் ஒலிக்கத் தொடங்கியது இயல்பானது மட்டும் அல்ல; நியாயமான கோரிக்கையும் ஆகும். வெளிநாட்டுப் பயணத்திலிருந்து ஊர் திரும்பிய வேகத்தில் அக்பர் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும் அல்லது பிரதமர் அவரைப் பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், முட்டுக்கொடுக்கும் வேலைகளே நடந்தன. கடைசியில் இந்த விவகாரம் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியதன் காரணமாக அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார் என்றாலும், இன்னும் அவரைக் கட்சியிலிருந்து பாஜக வெளியேற்றவில்லை.
பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தீவிரமான பண்பைப் பெற வேண்டும் என்றால், முதலில் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தைத் தீவிரமாக அணுகும் பார்வையைப் பெற வேண்டும். அரசியல் தளத்தில் வெளிப்படும் தீவிரம்தான் அரசு நிர்வாகத் தளத்திலும் வெளிப்படும். விளைவாக, ஏனைய துறைகளிலும் அது எதிரொலிக்கும். பெண்கள் விஷயத்தில் இந்திய அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதற்கு இவ்விவகாரத்தில் பாஜக காட்டுகிற அலட்சியத்தை ஓர் உதாரணமாகச் சொல்ல முடியும். அதேசமயம், இதைத் தனித்த ஒரு கட்சியின் அலட்சியமாகக் கூறி ஏனையோர் தப்பித்துக்கொள்ள முடியாது. இந்நிலை மாற வேண்டும். அரசியலில் மட்டும் அல்ல; திரைத்துறை, ஊடகங்கள், பிற துறைகள் என்று எல்லா இடங்களிலும் பார்வைகள் மாற வேண்டும்.
தமிழ்நாட்டில் ஊடகங்கள் முன்னிலையில் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி குற்றஞ்சாட்டியிருக்கிறார்; இயக்குநர் சுசிகணேசன் மீது இயக்குநர் லீனா மணிமேகலை குற்றஞ்சாட்டியிருக்கிறார். இன்னும் பல பெண்கள் தத்தமது சங்கடங்களைச் சமூக வலைதளங்கள் வழியே கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருக்கின்றனர். எதிர்வினையாக,  ‘இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? சட்டரீதியாகப் போராடலாமே?’ என்ற கேள்விகள் பெண்களை நோக்கி வீசப்படுவதையும் கேட்க முடிகிறது. இந்த விஷயத்தில் சந்தேகத்தின் பலனைப் பெண்கள் தரப்புக்கு வழங்குவதே தார்மிக நியாயமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், எல்லா வகை பாலியல் சீண்டல்களையும் ஆதாரத்தோடு நிரூபிக்க இயலாது. மேலும், பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒரு பெண் தத்தமது துறையில் வாய்ப்பு மறுப்பு உள்ளிட்ட பல்வேறு மறைமுகக் தாக்குதல்களுக்கு ஆளாகும் அச்சுறுத்தலினூடாகவே தன்னுடைய கடந்த கால பாதிப்புகளை இன்றும் பேச வேண்டியிருக்கிறது.
பாலியல் சீண்டல்களைச் சட்டரீதியாக அணுகுவது, குற்றஞ்சாட்டப்பட்டவர் மறுப்பது, வழக்காடுவது என்கிற கட்டங்களுக்கு எல்லாம் முன்னால், பெண்கள் தங்கள் மௌனத்தைக் கலைப்பதற்கான துணிச்சல் இன்றைய சூழலில் உருவாகியிருப்பதே ‘நானும் இயக்கம்’ ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான நகர்வுதான். ‘ஆண்கள் என்பதாலேயே நாம் அத்துமீறலாம்; பெண்கள் என்பதாலேயே அவர்களைச் சீண்டிப் பார்க்கலாம்’ என்ற எண்ணம் இனிவரும் காலங்களிலும் அவ்வளவு சீக்கிரமாக யாரிடமும் எட்டிப் பார்க்க முடியாத ஒரு அச்சத்தை இந்த இயக்கம் உண்டாக்கியிருக்கிறது. வெறும் குற்றச்சாட்டாக முடிந்துவிடுவது அல்ல; அது கிரீடத்தையும் சாய்க்கும் என்பதற்கு அக்பர் உதாரணம் ஆகியிருக்கிறார். நல்லது தொடரட்டும்!




அலசல்: #MeToo





சினிமா துறையிலும், ஊடகத்துறையிலும் ஆரம்பித்த #MeToo மூவ்மென்ட் மெல்ல அனைத்து துறைகளிலிருந்தும் வெளிவந்துகொண்டிருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு தலைவர் சுரேஷ் ரங்கராஜன் பாலியல் புகாரில் சிக்கி, விசாரணை நடவடிக்கைக்காக கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இது கடந்த வாரத்தில் நடந்தது. இதுபோல பணியிடங்களில் பாலியல் புகார்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. 
பணியிடங்களில் நடக்கும் பாலியல் புகார்கள் குறித்து நிறுவனங்கள் தங்கள் ஆண்டறிக்கையில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு ஒன்றை அமைக்கவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும். ஆனால், பாலியல் புகார்கள் குறைவதற்குப் பதிலாக ஒவ்வோராண்டும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்திய நிறுவனங்களில் சந்தை மதிப்பில் முதல் 50 இடங்களில் உள்ள நிறுவனங்களில் 2017-18 நிதி ஆண்டில் மட்டும் 601 பாலியல் சீண்டல் புகார்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 5.81% அதிகம். குறிப்பாகச் சேவைத்துறை சார்ந்த நிறுவனங்களில் அதிகளவிலான புகார்கள் வந்துள்ளன. விப்ரோ நிறுவனத்தில் 101, ஐசிஐசிஐ வங்கியில் 99, இன்ஃபோசிஸ் 77, டிசிஎஸ் 62, ஆக்சிஸ் வங்கி 47 என பாலியல் புகார்கள் பதிவாகியுள்ளன. 
தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் பொதுத்துறை நிறுவனங்களில் குறைவாகவே புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இதன் அர்த்தம் பொதுத்துறை நிறுவனங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிட சூழல் நிலவுகிறது என்றில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் புகார்கள் மூடிமறைக்கப்படுவதால்தான் குறைவாகப் பதிவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்பதுதான் உண்மை நிலை.
இதற்கு முற்றிலுமான காரணம் தனிமனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை சமூகம் இழந்துவருவதான். வேகமாக வளர்ந்துவரும் நாடு என்று இந்தியாவை உலக நாடுகள் அதிசயித்துப் பார்க்கின்றன.
ஆனால், இந்த வேகமான, துரிதமான வாழ்க்கையில் நாம் நம் மனிதத் தன்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோம் என்பதன் விளைவுகள்தான் இன்று சமூகத்தில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது. தனக்குக் கீழே பணிபுரியும் பெண்கள் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல் சுரண்டலில் ஈடுபடுவது சமூகத்தின் எல்லா நிலைகளிலும் நடந்துகொண்டிருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல்.     
கடந்த முப்பது வருடங்களாகத்தான் பெண்கள் அதிகமாக ஆண்களைப் போல பணியிடங்களுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்னமும் கூட பணியிடங்களில் ஆண்/பெண் விகிதம் 3:1 என்ற அளவில் தான் இருக்கிறது. அதாவது 25 சதவீதம் பெண்கள் எனில் 75 சதவீதம் ஆண்கள் தான் பணியிடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் பணி செய்யும்போது குடும்பத்தின் வருமானம் உயர்கிறது. வருமானம் உயரும்போது தேவைகள் பூர்த்தியாகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. 
இந்நிலையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த பாலியல் சுரண்டல்கள் மீண்டும் பெண்களை வீட்டுக்குள் முடக்கிவிடக்கூடும். இது மறைமுகமாகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். ஏனெனில், சமூகம் பெண்களைப் பாதுகாப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டும். அவர்களுக்கான இடத்தை ஆண்களைப் போல சுதந்திரமாக அனுபவிக்க  அனுமதிக்காது. நாம் வளரும் விதம், நம்முடைய கல்வி முறை அனைத்தும் இந்தச் சமூகத்தை இப்படித்தான் கட்டமைத்து வைத்திருக்கிறது.




இது ஏற்படுத்திய விளைவு என்ன?


#MeToo வாயிலாக வெளிவந்த குற்றச்சாட்டுகள் குறித்து பல ஊடக நிறுவனங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி, பல ஊடகங்களின் ஆசிரியர்கள் பதவி விலகினர், சிலர் தாங்கள் பல வருடங்களுக்கு முன்னர் அத்துமீறிய பெண்களிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்க முயன்று வருகிறார்கள்.

இந்த கடுமையான சூழலை எப்படி கடந்து செல்வது?
முதலில் இந்த #MeToo என்பதை ஆண்களை மையமாக கொண்ட ஒன்றாக மட்டும் ஆக்கிவிட வேண்டாம். இதன் பிறகும் உங்களுக்கு பயமிருந்தால், பெண்களின் உலகத்திற்கு வாருங்கள். ஆம், தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை பெண்கள் இப்படித்தான் கழிக்கிறார்கள்.

இரண்டாவதாக, #MeToo இயக்கம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள அளவையும், இதுபோன்ற ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தைகள் சமூகத்தில் எப்படி ஆழ வேரூன்றியுள்ளது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.





பூதாகரமாகும் #MeToo: என்ன சொல்லுகிறது ஆண் சமூகம்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES


மூன்றாவதாக, இனியாவது பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட உங்களது நண்பர்களை புகழ்வதை, பாராட்டுவதை நிறுத்திவிட்டு, அதன் வீரியத்தை யோசித்து பாருங்கள்.
உங்களது ஆண் நண்பர்கள் குழுவில், பைத்தியக்காரத்தனமாக பேசும் விடயங்கள் எப்படி ஒரு பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் பயத்தை உண்டாக்கும் நிகழ்வாக மாறுகிறது என்பது குறித்து பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வதில்லை.
இனி பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் உங்களது நண்பர்களை ஆதரிப்பதை நிறுத்துங்கள், இல்லையெனில் நீங்களும் அந்த குற்றத்திற்கு துணை போனவராக கருதப்படுவீர்கள்.

கிட்டத்தட்ட கடந்த ஒருவாரமாக பரபரப்பை உண்டாக்கி இருக்கும் இந்த விவகாரம், ஆண்களின் செயல் மற்றும் பேச்சுரீதியிலான நடத்தையில் சுய-விழிப்பை உண்டாக்கியுள்ளது. பணியிடத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாக்கும் முயற்சியில் இது ஒரு படி முன்னேறியதை காட்டுகிறது.

மேலும் ஆங்கிலத்தில் 

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN