இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள்


#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 2


What are the major social issues related to Child labor in India?(IES 2018)

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய சமூக பிரச்சினைகள் யாவை?(IES 2018)



கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  

contact mail ID  tnpscprime@gmail.com




இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள்




இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம் வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது.


2001 ஆம் ஆண்டு இந்திய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,5-14 வயது குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை, 12.6 மில்லியன் இருக்க வேண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது.குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை இந்தியாவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; உலகளவில், 215 மில்லியன் குழந்தைகள் வேலை செய்கின்றனர், பலர் முழுநேரமும்.

2001 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 12.6 மில்லியனில், 0.12 மில்லியன் குழந்தைகள் அபாயகரமான வேலையில் இருந்தனர்.பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 14 வயதிற்கு கீழ் உள்ள தொழிலாளர்கள் உலகி லேயே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக யுனிசெபால் மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் 60 சதவீதம் குழந்தைத் தொழிலாளர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது , ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு70 சதவீதம் குழந்தைத் தொழிலாளர் விவசாயம் மற்றும் அதை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. விவசாயம் தவிற, குழந்தைத் தொழிலாளர் இந்திய பொருளாதாரத்தின் அனைத்து முறைசாரா துறைகளிலும் காணப்படுகின்றனர்.

இந்திய அரசியலமைப்பின் 24ஆம் உறுப்புரை குழந்தை தொழிலாளர் நடைமுறையைத் தடை செய்கிறது. மேலும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இளம் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு)குழந்தைகள் சட்டம்-2000 மற்றும் குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழிப்பு) சட்டம்-1986, குழந்தை தொழிலாளர் நடைமுறையை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க மற்றும் தடுக்க சட்ட அடிப்படையை வழங்குகின்றனர்.






காரணிகள்




மனித வரலாற்றில் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களில், 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குடும்ப நலனுக்காக பல்வேறு வழிகளில் பங்களித்துள்ளனர். யுனிசெப் வறுமை குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் என தெரிவிக்கிறது. இந்த அறிக்கை, உலகின் வளரும் மற்றும் முழு வளர்ச்சி அடையாத நாடுகளில், கிராமப்புற மற்றும் வறுமை சூழ்ந்த பகுதிகளில், குழந்தைகளுக்கு மாற்று வழி இல்லை என குறிப்பிடுகிறது. பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், குழந்தை தொழிலாளர் முறை ஒன்றே வழி. ஒரு பிபிசி அறிக்கை, இதேபோல், வறுமை மற்றும் போதிய பொது கல்வி உள்கட்டமைப்பு இல்லாத நிலையே இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களுக்கான காரணங்கள் என குறிப்பிடுகிறது.

யூனிசெப் தனது அறிக்கையில், சிறுவர்களை விட சிறுமிகள் இரண்டு மடங்கு அதிகமாக பள்ளியில் இருந்து விலகி வீட்டு வேலை செய்வதாக குறிப்பிடுகிறது. பள்ளியில் சேர்க்கும்பொழுது, குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர், தங்களின் சக்திக்கேற்ப செலவுகள் மற்றும் கட்டணங்கள் கொண்ட ஒரு பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெண்களின் கல்விக்கு குறைந்த முன்னுரிமை தரப்படுகிறது. சிறுமிகள் பள்ளிகளில் துன்புறுத்த மற்றும் தொல்லைக்குட்படுத்தப்படுகின்றனர். தரக்குறைவான பாடத்திட்டம் அல்லது பாரபட்சம் காட்டுவதன் மூலம் ஓரங்கட்டப்படுகின்றனர். முற்றிலும் அவர்களின் பாலினம் காரணமாக, பல சிறுமிகள் பள்ளியில் சேர்க்கப்படாமல் அல்லது இடைநிற்றல் காரணமாக குழந்தை தொழிலாளராக ஆக்கப்படுகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வறுமையே குழந்தை தொழிலாளர் முறைக்கு மிக பெரிய காரணம் என கூறுகிறது. ஒரு குழந்தையின் வருமானம் அதன் வாழ்விற்கு அல்லது வீட்டு தேவைக்கு மிக முக்கியமான ஒன்று. சில குடும்பங்களில், குழந்தை தொழிலாளர் வருமானம் வீட்டு வருமானத்தில் 25 முதல் 40 சதவீதம் வரை உள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2008ல் நடத்திய ஆய்வின்படி, பள்ளிகள் இல்லாமை மற்றும் தரம் குறைந்த பள்ளிகள் குழந்தை தொழிலாளர் முறைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. பல சமூகங்களில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் போதுமான பள்ளி வசதிகள் இல்லை. சில நேரங்களில் பள்ளிகூட வசதி இருந்த போதிலும், அவைகள் மிக தொலைவிலும், சென்றடைய கடினமானதாகவும், கட்டணம் மிக அதிகமாக அல்லது கல்வி தரம் மிகவும் குறைந்ததாக உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளிகளில் சேர்த்து கற்பிப்பது எந்த அளவில் பயனளிக்கும் என வியக்கின்றனர். அரசு நடத்தும் ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் சேர்ந்தாலும், அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் 75% நேரம் கூட பள்ளிக்கு வருவதில்லை.யுனிசெப் அறிக்கையின்படி, இந்தியாவில் 90% குழந்தை தொழிலாளர் அதன் கிராமப்புற பகுதிகளில் இருந்தபோதிலும், அங்கு பள்ளிகளும் அவற்றின் தரமும் வலுவற்ற நிலையில் உள்ளன; இந்திய கிராமப்புற பகுதிகளில், அரசாங்கப் பள்ளிகளுக்கு சுமார் 50% கட்டிடம் இல்லை, 40% பள்ளிகளுக்கு கரும்பலகை இல்லை, புத்தகங்கள் சில பள்ளிகளிலேயே உள்ளன. அரசின் நிதியில் 97%, ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளுக்கு சம்பளமாக செலவாகிறது. 2012 வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரையின்படி இந்தியாவில் 6-14 வயது குழந்தைகளில் 96% பள்ளியில் சேர்ந்த போதிலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது- 81,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு கரும்பலகை கூட இல்லை மற்றும் சுமார் 42,000 அரசு பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இயங்குகின்றன.

பிக்கரி(Biggeri) மற்றும் மெஹ்ரோத்ரா(Mehrotra) குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பொருளாதார காரணிகள் பற்றி படித்தார். அவர்கள் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட ஐந்து ஆசிய நாடுகளில் தங்கள் ஆய்வை கவனம் செலுத்தினர். அவர்கள் குழந்தை தொழிலாளர் ஐந்து நாடுகளுக்கும் ஒரு கடுமையான பிரச்சினையாக உள்ளது என்றும், ஆனால் அது ஒரு புதிய பிரச்சினை அல்ல என்றும் கண்டனர். மனித வரலாற்றில் பொருளாதார காரணங்கள் குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவித்துள்ளன. அவர்கள் குழந்தை தொழிலாளருக்கான காரணங்கள் தேவை மற்றும் வழங்கலின்படி இருக்கும் என கண்டனர். வறுமை மற்றும் நல்ல பள்ளிகள் கிடைக்கப்பெறாததும் குழந்தை தொழிலாளர்களின் தேவையின் பக்க காரணங்களை விளக்குகின்றன. அதிக வருமானம் தரும் முறைசார்ந்த பொருளாதாரத்தை விட குறைந்த வருமானம் தரும் முறைசாரா பொருளாதாரத்தின் வளர்ச்சி தேவையின் பக்கத்தை விளக்குவதாக கூறினர். இந்தியாவில் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பல விதிமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் வளர்ச்சியை தடுக்கின்றன. எதிர்பாராத விளைவாக இந்தியாவின் சிக்கலான தொழிலாளர் சட்டங்களினால் வேலைகள் முறைசாரா துறைக்கு மாற்றம் பெற்றுவிட்டன. இதன் விளைவாக, விவசாய துறைக்கு பின்னர் முறைசாரா வர்த்தகம் மற்றும் முறைசாரா சில்லறை வேலை ஆகியவற்றில் குழந்தை தொழிலாளர் ஈடுபடுத்தப்படுகின்றனர். குடும்பத்திற்கு சொந்தமான முறைசாரா துறைகளில், குறைந்த சம்பளத்திற்காகவும், வேலையை விட்டு நீக்குவது எளிது என்ற காரணத்தினாலும் குழந்தை தொழிலாளர் நடைமுறைபடுத்தப்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் கூட பள்ளிநேரம் முடிந்த பிறகு குடும்பம் சார்ந்த உற்பத்தி மற்றும் பொருளாதார வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பிக்கரி மற்றும் மெஹ்ரோத்ரா கண்டறிந்துள்ளனர். மற்ற அறிஞர்கள் கூட நெளிவுதன்மையற்ற இந்திய தொழிலாளர் சந்தையின் கட்டமைப்பு, முறைசாரா பொருளாதாரத்தின் அளவு, தொழிற்சாலைகளின் வளர்ச்சியின்மை மற்றும் நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் இல்லாமை ஆகியவை குழந்தை தொழிலாளர் முறையை ஏற்றுக்கொண்டமைக்கும் தேவையை பாதிக்கும் முக்கிய பொருளாதார காரணிகளாகவும் கூறுகின்றனர்.

சிக்னோ(Cigno) மற்றும் பலர், அரசாங்கம் நிலம் மறுபகிர்வு திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களின் பொருளாதார சுதந்திரத்தை அதிகரிப்பதற்காக சிறிய அளவில் நிலங்களை கொடுத்தப்பொழுது, திட்டமிடப்படாத விளைவாக குழந்தை தொழிலாளர் முறையை அதிகரித்ததாக கூறுகின்றனர். சிறிய துண்டான நிலங்களில் விலையுயர்ந்த விவசாய உபகரணங்கள் பயன்படுத்த முடியாது என்பதால் அவற்றில் உற்பத்தியை கூட்ட அதிக வேலையாட்கள் தேவைப்பட்டனர். இதில் குழந்தை தொழிலாளர்களும் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டனர்







இந்தியாவில் குழந்தை தொழிலாளர் சட்டங்கள்



காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பிறகு, இந்தியா பல அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் மாநில கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள் எந்த தொழிற்சாலை அல்லது சுரங்கம் அல்லது வேறு அபாயகரமான வேலையில் 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்த தடை செய்யப்பட்டுள்ளது (பிரிவு 24). இந்திய அரசியலமைப்பு, 1960க்குள், ஆறு முதல் 14 வயது குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க தேவைப்படும் உள்கட்டமைப்பு மற்றும் வளங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தது

இந்திய அரசாங்கம் கூட்டாட்சி வடிவம் கொண்டது. குழந்தை தொழிலாளர் பற்றி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்ற முடியும். முக்கிய 


தேசிய சட்ட மேம்பாடுகள் பின்வருமாறு:

1948 தொழிற்சாலைகள் சட்டம்: எந்த தொழிற்சாலையிலும் 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 15-18 வயதுள்ளவர்கள் எந்த தொழிற்சாலையில், எவ்வளவு நேரம், எப்பொழுது வேலையில் ஈடுப்படுத்தப்படலாம் என விதிகள் விதிக்கிறது.

1952 சுரங்க சட்டம்:
இந்த சட்டம் 18 வயதுக்கு கீழே உள்ளவர்களை சுரங்கத்தில் வேலையில் அமர்த்த தடை செய்கிறது.

1986 குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்: 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை, தீங்கு விளைவிக்கும் வேலைகள் என பட்டியலில் உள்ள தொழில்களில் ஈடுப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 2006 மற்றும் 2008 ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.

குழந்தைகள் இளம் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2000 சட்டம்: இந்த சட்டம் எந்த ஒரு அபாயகரமான வேலையில் அல்லது அடிமைத்தனமாக குழந்தையை வேலைக்கு அமர்த்துவது சிறை தண்டனைக்குறிய குற்றம் என வரையறுக்கிறது.

அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009: இந்த சட்டம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி அளிப்பதை உறுதி செய்கிறது. மேலும், ஒவ்வொரு தனியார் பள்ளியிலுள்ள இடங்களில் 25 சதவீதம் பின்தங்கிய வகுப்பு குழந்தைகள் மற்றும் உடல் சவால் உள்ள குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


இந்தியா 1987 ல் குழந்தை தொழிலாளர் பற்றிய தேசிய கொள்கையை உருவாக்கியது. இந்த கொள்கை, தீங்கு விளைவிக்கும் தொழில்களில் ஈடுப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்கான, படிப்படியான மற்றும் தொடர்நிலை அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தது. சட்டங்களின் கடுமையான அமலாக்கல் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் குழந்தை தொழிலாளர் பிரச்சினைக்கான மூல காரணங்களான வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்க்கு திட்டம் தீட்டியது. இது 1988 ஆம் ஆண்டில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (NCLP) உருவாகுவதற்க்கு வழிவகுத்தது. தற்போது மத்திய அரசு 602 கோடி நிதி ஒதுக்கீட்டின் மூலமாக இந்த சட்ட மற்றும் மேம்பாட்டு முயற்சி தொடர்கிறது. இருந்த போதிலும், குழந்தை தொழிலாளர் என்பது இந்தியாவில் ஒரு பெரிய சவாலாக உள்ளது










குழந்தை தொழிலாளர் விளைவுகள்



குழந்தை தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது பொருளாதார நலன் அடிப்படையில் ஒரு கடுமையான பிரச்சினையாக கருதப்படுகிறது. வேலை செல்லும் குழந்தைகளால் தேவையான கல்வி பெற முடியவில்லை. அவர்கள் உணர்வுபூர்வமாக, உளவியல் ரீதியாக, அறிவு சார்ந்த, உடல்ரீதியான வளர்ச்சி பெற வாய்ப்பு கிடைப்பது இல்லை. அபாயகரமான வேலைகளில் ஈடுப்படும் குழந்தைகள் இன்னும் மோசமான நிலையில் உள்ளன. வேலை செல்லும் குழந்தைகள் படிப்பறிவில்லாமல் இருப்பது, அவர்கள் திறமையை கட்டுப்படுத்துவதுடன் அவர்களுக்கும் அவர்களை சார்ந்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு பொருளாதாரம் தொடர்ந்து வளர்வதற்கு, படித்த மற்றும் முக்கிய அடிப்படை தொழில் திறமைகளை கொண்ட பணியாளர்கள் தேவை. இன்றைய இளம் தொழிலாளர்கள், நாளைய இந்தியாவின் மனித மூலதனமாவர்.

இந்தியாவில் குழந்தை தொழிலாளர் பெரும்பாலும்(70%) விவசாயத்தில் ஈடுப்படுகின்றனர். பிறர், முறையான படிப்போ பயிற்சியோ தேவையில்லாத, திறன் குறைவான மற்றும் வேலை அதிகமுள்ள நெசவு, வீட்டு வேலை செய்தல் போன்றவற்றில் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி, குழந்தைகளை வேலைக்கு பதிலாக பள்ளிக்கு அனுப்புவதன் மூலம் வளரும் நாடுகளுக்கு பெரும் பொருளாதார நலன்கள் உள்ளன. கல்வி இல்லாமல், அவர்கள் வறுமையிலிருந்து வெளி வர அதிக ஊதியம் தரும் வேலையில் சேர தேவையான ஆங்கில அறிவு மற்றும் தொழில்நுட்ப திறன்களை பெற முடியாது



மேலும் அறிய (தமிழில்)

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN