பணவீக்கம்(INFLATION) என்றால் என்ன?

# அடிப்படை கற்றல் 
#UPSCTAMIL

பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன்
(அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும்.



Related image

விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம் - இதை அகப் பரிவர்த்தனச் சாதனம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவின் மதிப்பில் ஏற்படும் இழப்பு என்றும் கொள்ளலாம்.விலை வீக்கத்தின் முக்கிய அளவீடு பணவீக்க வீதம் ஆகும். பணவீக்க வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் (வழக்கமாக நுகர்வோர் விலைப் பட்டியலில்) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும். அதிக பட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களை துரத்தி செல்வது பணவீக்கம் என்கிறார் வாக்கர். அதாவது அதிக தேவை குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பணத்தின் பெறுமதி குறைவடைவது என்பதை இது குறிக்கிறது

பணவீக்கம் 7.38% சதவீதம் என்றால், 100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பொருளை நாம் ரூ107.38 க்கு வாங்குகிறோம் என்பது பொருள். பொருட்களின் விலை ஏறுவதால் நம்முடைய வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களின் விலைக்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தான் பணவீக்கம்.


பணவீக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது



உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும்.

ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்க, ஆனால் பொருள் குறைவாக இருக்கும் பொழுது, பொருளின் விலை உயரும். மழை பொய்க்கும் பொழுது, அரிசி சரியாக சாகுபடியாகா விட்டால், அரிசி விலை உயரத் தானே செய்யும்.



இந்த நிலை தான் பணவீக்கம் எனப்படுகிறது. இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் ?



பொருட்களின் விலை அதிகரிக்கும் பொழுது மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களை முன்பு வாங்கியதை விட குறைவாகவே வாங்குவார்கள். இதனால் பணம் செலவழிக்கப்படாமல் போகும். பணப்புழக்கம் குறையும்.

பொருட்களை வாங்குபவர்கள் குறையும் பொழுது உற்பத்தி குறையும்.உள்நாட்டு விலை உயர்வினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரும். அதனால் நம்முடைய உற்பத்தி பிற நாடுகளுடன் போட்டியிடமுடியாமல் நசுங்கிப் போகும். ஏற்றுமதியும் குறையும்.
நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

இத்தகைய சூழலை கணக்கிடத்தான் பணவீக்க குறியீடு பல நாடுகளின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை வாரந்தோறும் இந்த பணவீக்க விகிதத்தை வெள்ளியன்று வெளியிடும். இதனை Wholesale Price Index என்று சொல்வார்கள். எப்படி பங்குக் குறியீடு பங்குகளின் விலைக் குறியீடாக உள்ளதோ, அதைப் போன்றே விலைவாசி உயர்வுகளை கணக்கிட இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும். இந்த குறியீடு தான் 7.38% மாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இது 7.1% மாக இருந்தது.

Wholesale Price Index மூன்று குறியீடுகளை உள்ளடக்கிய பொதுவான விலைவாசிக் குறியீடு.

- உணவுப் பொருள்கள் (தானியங்கள் - Food Items), உணவு வகையைச் சாராத பொருள்கள் (Non-Food Items), தாதுப்பொருள் (Minerals) போன்றவை முதன்மை பொருட்களாகக் (Primary Articles)கொண்டு கணக்கிடப்படுகிறது.

- மின்சாரம், எரிபொருள் போன்றவற்றிற்கான தனிக் குறியீடு
- உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான குறியீடு (ஜவுளி, உலோகங்கள்)


இந்த பணவீக்க விகிதம் பங்குச்சந்தை முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும்?


பங்குச்சந்தை முதலீடுகளில், பணவீக்கம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நீண்ட கால முதலீட்டில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும் பணவீக்கம் உயர்வதற்கேற்ப உயரும் எனக் கருதப்படுகிறது. பணவீக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, பொருட்களின் விலை உயர்வால், ஒரு நிறுவனத்தின் மதிப்பும் அதிகமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் இது உண்மையான மதிப்பாகாது. பணவீக்கம் காரணமாக மிகைப்படுத்தி காட்டப்படுகிறது.மோசமான பொருளாதார சூழ்நிலையில், பணவீக்கம் உயரும் பொழுது பங்கு முதலீடுகள் சுருங்கிப் போகலாம்.


#UPSCTAMIL

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN