சட்ட மேலவை குறித்த தேசியக் கொள்கை

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg

General Studies-II: 

Topic : Parliament and State Legislatures – structure, functioning, conduct of business, powers & privileges and issues arising out of these.

Expected Question for UPSC  exam (Tamil): 

If there was any real benefit in having a Legislative Council, all States in the country should, and arguably would, have a second chamber. Evaluate.(250 words)


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் 




நன்றி : இந்து தமிழ்

சட்ட மேலவை குறித்து தேசியக் கொள்கை அவசியம்


சட்ட மன்றங்களில் மேலவை வேண்டுமா வேண்டாமா எனும் விவாதத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது ஒடிஷா மாநில அரசு கொண்டுவந்திருக்கும் தீர்மானம். 2015-ல், ஒடிஷா அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 49 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மேலவை தேவை என்று அந்த மாநில அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஏழு மாநிலங்களில் மட்டுமே மேலவை இருக்கும் சூழலில், மேலவை தொடர்பாகப் பல மாநிலங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் அரசியல் கட்சிகளிடையேயும் இதில் கருத்தொற்றுமை இல்லை என்றும் தெரிகிறது.


ஒரு மாநிலத்தில் சட்ட மேலவையை ஏற்படுத்துவது, நீண்ட தொடர் நடவடிக்கைகளைக் கொண்ட நடைமுறையாகும். முதலில் மாநில சட்டப் பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பிறகு, அது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு அது தொடர்பாகப் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். அசாம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் சட்ட மேலவையை அமைக்க வேண்டும் என்று 2013-ல் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மசோதாக்கள் இன்னமும் நிலுவையிலேயே உள்ளன.
இந்த மசோதாக்களைப் பரிசீலனை செய்ய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, உத்தேசப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் தந்தாலும் ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. சட்ட மேலவைகளை உருவாக்குவது தொடர்பான தேசியக் கொள்கையை நாடாளுமன்றமே வகுக்க வேண்டும், அப்போதுதான் மாநிலங்களில் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் திடீரென மேலவையைக் கலைக்காமல் இருக்கும் என்று அக்குழு தெரிவித்துள்ளது. சட்ட மேலவையில் ஆசிரியர்கள், பட்டதாரிகளுக்குப் பிரதிநிதித்துவம் தரும் சட்டம் தொடர்பாக மறுபரிசீலனை தேவை என்றும் அது பரிந்துரைத்துள்ளது.
கல்வியாளர்கள், அறிஞர்கள், மகளிர், சிறுபான்மைச் சமூகத்தவர் இடம்பெற மேலவை நல்ல வாய்ப்பாக இருக்கும். சட்டப் பேரவைகளில் அவசரமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் நிறைவேற்றும் மசோதாக்களை நிதானமாகப் பரிசீலிக்கவும், அறிவுபூர்வமாக ஆராயவும் மூத்தவர்கள்-படித்தவர்கள் நிரம்பிய மேலவை வாய்ப்பளிக்கும். ஆனால், அரசியல் தலைவர்கள், தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குற்றப் பின்னணி உள்ள கட்சி முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள், அதிகாரத் தரகர்கள், திரைப்படப் பிரமுகர்கள் இடம்பெறும் கொலு மண்டபமாக மேலவை மாற்றப்படுவதையும் பார்த்திருக்கிறோம். இதனால், சட்ட மேலவைக்கான செலவு வீண் விரயம் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் எழுத்தறிவு பெற்றவர் எண்ணிக்கைக் குறைவு என்பதால், பட்டதாரித் தொகுதிகளுக்கு அவசியம் இருந்தது. இப்போது கோடிக்கணக்கில் பட்டதாரிகள் பெருகிவிட்டனர். பேரவையிலும் அமைச்சரவையிலுமே அதிகப் பட்டதாரிகள் உள்ளனர். மேலும், நாடாளுமன்ற மேலவையானது மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை என்பதால், அதை சட்ட மேலவைகளுடன் ஒப்பிடுவதும் பொருத்தமல்ல. எனவே, ஒடிஷாவின் கோரிக்கையைப் பரிசீலிக்கும் அதே சமயத்தில், நாடு முழுவதற்கும் சேர்த்தே கருத்தொற்றுமை அடிப்படையில் தேசியக் கொள்கை வகுப்பது நல்லது!


Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN