377-வது பிரிவு

UPSC தமிழில் (UPSC in Tamil ) Telegram  லிங்க்  https://t.me/joinchat
#UPSCTAMIL


General Studies-I:

TopicModern Indian history from about the middle of the eighteenth century until the present- significant events, personalities, issues

Expected Question for UPSC  exam (Tamil): 

1.Supreme Court verdict on Section 377 is a landmark judgement but it also will spark many more challenges to inequality, discrimination. Analyze.(250 words)

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் . 
contact mail ID  tnpscprime@gmail.com




கட்டுரை எண் : 1

நன்றி: தமிழ் இந்து 


பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மரியாதை!


தன்பாலின உறவாளர்களுக்கான உரிமையை அங்கீகரித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு. 2013-ல் சுரேஷ்குமார் கௌசல் வழக்கில் 2 நீதிபதிகளைக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற அமர்வால் வழங்கப்பட்ட தவறான தீர்ப்பு தற்போது சரிசெய்யப்பட்டிருக்கிறது. தாமதமாகக் கிடைத்த தீர்ப்பு எனினும் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் முன்னோடித் தீர்ப்பு இது.
தன்பாலின உறவாளர்கள் தங்களுடைய விருப்பப்படி அந்தரங்க உறவுகொள்ளவும் தங்களுடைய அந்தரங்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாத்துக்கொள்ளவும், அச்சமின்றி வாழவும் உரிமை படைத்தவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு எதிர்பாராதது அல்ல. முன்பு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடுத்த வழக்கில்தான் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2013 தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் பரிசீலனைக்கு ‘கௌசல் வழக்கு’ பரிந்துரைக்கப்பட்டது.

Image result for section 377


இடைப்பட்ட காலத்தில் ‘அந்தரங்க உறவு’, ‘பாலியல் நாட்டம்’ தொடர்பாக அளிக்கப்பட்ட இரண்டு முக்கியத் தீர்ப்புகள், சமீபத்தியத் தீர்ப்புக்கான சட்ட அடிப்படையாக அமைந்தன. திருநங்கைகள்-திருநம்பிகள் உரிமைகள் தொடர்பான ‘தேசிய சட்ட சேவைகள் ஆணையம்’ (2014) வழக்கில் ‘பாலியல் நாட்டம்’, ‘பாலின அடையாளம்’ அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. கே.எஸ்.புட்டசாமி (2017) அல்லது ‘அந்தரங்க வழக்கு’ விவகாரத்தில் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ‘பாலியல் நாட்டம்’ தனியுரிமை சார்ந்தது, அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டது என்று தீர்ப்பு வழங்கியது.
அரசியல் சட்டமானது மாறிவரும் சூழலுக்கேற்ற உயிர்ப்புள்ள ஆவணம், அது பல்வேறு உரிமைகளை முற்போக்காக உணர்ந்துகொள்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. அங்கீகரிக்கப்பட்ட சட்ட உரிமையைத் திரும்பப் பெற இயலாது என்ற சட்டக் கோட்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனிநபர் சுதந்திரம் என்பதின் எல்லை விரிவடைகிறது என்பதையும் பொதுக்கருத்துகளால் ஏற்பட்ட அழுத்தங்களிலிருந்து தனிநபர் உரிமைகள் பற்றிய சிந்தனைகள் விடுதலை பெற்றுள்ளன என்பதையும் எடுத்துக்காட்டும் வகையிலேயே மற்ற நீதிபதிகள் நால்வரது தீர்ப்புகளும் அமைந்துள்ளன.
முக்கியமாக, எல்ஜிபிடிகியூ சமூகத்தவரின் உரிமை, இத்தனை ஆண்டுகளாகக் குற்றச்செயலாகவே பார்க்கப்பட்டதால் வரலாறு அவர்களிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா வருத்தம்தோயக் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு தளர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம். இந்தத் தீர்ப்பின் மூலம் பாலியல் சிறுபான்மையினர் தங்கள் உரிமைகளைக் காத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

          Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice

கட்டுரை எண் : 2

நன்றி : The Indian Express


377-வது பிரிவு நீக்கம்: பாதுகாப்பு நிச்சயம், மரியாதை லட்சியம்!


377 பிரிவு ரத்து மூலமாக ஒரு பாலின விரும்பிகளை குற்றவாளிகளாக பார்க்கும் நடைமுறை மாறும். அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.


377-வது சட்டப் பிரிவு நீக்கம், பாலைவனத்தில் மழை பொழிந்த சந்தோஷத்தை மனதில் விதைக்கிறது. ஒரு செயல்பாட்டாளனாக இந்திய உச்ச நீதிமன்றம் தந்த வரலாற்றுத் தீர்ப்பாக இதைக் கருதுகிறேன்!
ஓரினச் சேர்க்கையை கொலைக் குற்றத்திற்கு இணையான ஒரு பெருங்குற்றமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவுதான் வரையறுத்து வைத்திருந்தது. இன்று (செப்டம்பர் 6) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அந்தச் சட்டப் பிரிவையே நீக்கி பிறப்பித்த உத்தரவு கோடிக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்வுரிமையை காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.
ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றாலே, அவர்களை ஏதோ கொலைகாரர்கள் போன்ற பார்வை மாறவேண்டும். இனி மாறும்! ஒரு பாலின ஈர்ப்பு என்பது, மரபணு சார்ந்த விஷயம்! தந்தை-தாய் மூலமாக வருகிற குரோமோசோம்களின் விகிதத்தைப் பொறுத்தே ஒரு பாலின விரும்பிகள் உருவாகிறார்கள்.
அறிவியல் ரீதியாக சொல்வதானால், உலகில் ஆண் என்றும் பெண் என்றும் யாரும் இல்லை. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் தன்மை இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் தன்மை இருக்கிறது. மலர்களில் இருபால் மலர் இருப்பது போலத்தான் இதுவும்! இந்த விகிதம் சற்றே கூடுகையில், அல்லது குறைகையில் அவர்களின் பாலின ஈர்ப்பு மாறுபடும்.
அவர்களும் மனிதர்கள்; அவர்களுக்கும் மனித உரிமை உண்டு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். மனித உரிமைக்கான எளிய விளக்கம் என்ன தெரியுமா? மனித உரிமை இயற்கையானது, ஒன்றோடொன்று இணைந்தது, விட்டுக் கொடுக்கவோ பிரிக்கவோ இயலாதது, அனைவருக்கும் பொதுவானது, உலகளாவியது!
மனித உரிமை இயற்கையானது என்று சொல்வதன் அர்த்தம் என்னவென்றால், பல உரிமைகளுக்கு சட்டம் இருக்காது. நீங்கள் சுவாசிக்கலாம் என்பதற்கு சட்டம் கிடையாது. ஆனால் அது இயற்கையான மனித உரிமை! அதேபோல இந்தியாவுக்கு தனி மனித உரிமை… அமெரிக்காவுக்கு தனி மனித உரிமை என்றெல்லால் இருக்க முடியாது.
பாலின உறவை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்! ஒன்று, பெண்கள் இடையிலான லெஸ்பியன். அடுத்து, ஆணுடனோ பெண்ணுடனோ உறவு வைத்துக்கொள்ளும், ‘கே’(GAY). மூன்றாவதாக, பை-செக்ஸுவல் என அழைக்கப்படும் ஆண்-பெண் இடையிலான உறவு! 4-வதாக திருநங்கைகள் எனப்படுகிற 3-ம் பாலினத்தவரின் உறவு! இதைத்தான், ‘LGBT’ என்கிறார்கள். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ஐ உச்ச நீதிமன்றம் நீக்கியதன் மூலமாக 4 பிரிவு பாலின உணர்வுக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இனி இதில் எந்த பாலின உறவையும் சட்ட விரோதமாக யாரும் சொல்ல முடியாது. இவ்வளவு நாளும் இயற்கைக்கு முரணான உறவு என்ற பெயரில் இதில் 3 வகையினரை பெற்றோரே கொடுமைப்படுத்திய நிகழ்வுகள் பல உண்டு. அந்தக் கொடுமைகளால் வீடுகளை விட்டு வெளியே ஓடிப் போனவர்கள் பலர்!
அப்படிச் சென்ற பலர், ரவுடிக் கும்பல்களிடம் சிக்கி உயிரை இழந்திருக்கிறார்கள். பலர் தற்கொலை செய்திருக்கிறார்கள். ஏராளமானோர் தாக்கப்பட்டிருக்கிறார்கள், மிரட்டப்பட்டிருக்கிறார்கள். திருச்சிராப்பள்ளியில் ஒரு விடுதியில் ஒரு திருநங்கையை பல ஆண்கள் உறவுக்கு கட்டாயப்படுத்தி, அதற்கு மறுத்ததால் நிர்வாண நிலையில் கத்தியால் குத்திக் கொலை செய்த நிகழ்வு நடந்தது.
திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இது போன்று ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகளுக்கு எதிராக பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எனவேதான் கோடிக்கணக்கான திருநங்கைகள், லெஸ்பியன்கள், ‘கே’ என்கிற பிரிவினர் ஆகியோரின் உரிமையை இந்தத் தீர்ப்பு நிலைநாட்டியிருக்கிறது என்கிறேன்.
377 பிரிவு ரத்து மூலமாக ஒரு பாலின விரும்பிகளை குற்றவாளிகளாக பார்க்கும் நடைமுறை மாறும். அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். உடனே சமூகத்தில் அவர்களுக்கு மரியாதை கிடைக்குமா? என்றால், அதற்கு சட்டப் பிரிவை நீக்கியது மட்டும் போதாது. மக்கள் மனங்கள் மாற வேண்டும். அதுவும் நடக்கும் என நம்பலாம்! அவர்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற செயல்பாட்டாளர்களின் லட்சியம்!
கொடுமையான 377-வது பிரிவை நீக்கியதன் மூலமாக மனித உரிமைப் பயணத்தில் இந்தியா ஒரு படி மேலே ஏறியிருக்கிறது என நம்பலாம்!

(ஆறுமுகம் ,கட்டுரையாளர், சமூக செயல்பாட்டாளர். மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் ‘சமூக நீதி’ என்கிற அமைப்பின் இயக்குனர்)
Topic: UPSC in TAMIL ( Mains) Answer Writing Practice
#UPSCTAMIL

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN