வங்கிகள் இணைப்பு அவசியமா?


General Studies-III:


Topic: Indian economy – planning

Expected Question for UPSC exam (Tamil):

It is argued that India needs a mix of efficiently run PSBs and aggressive private banks to achieve growth and development along with social justice. Do you think recent merger of PSBs was a right decision? In the light of the statement, critically comment.


திறமையான பொதுத்துறையும் ஆக்ரோஷமான தனியார்துறையும் சமூக நீதியுடன் இணைந்த வளர்ச்சியை அடைய உதவும் என வாதிடுகின்றனர்.இந்த கூற்றின் அடிப்படையில் சமீபத்திய வங்கி இணைப்பு முடிவு சரியானது என நினைக்கிறீர்களா? விமர்சன ரீதியான கருத்து தெரிவிக்கவும்.


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  


contact mail ID  tnpscprime@gmail.com


வங்கிகள் இணைப்பு அவசியமா?

வாசு கார்த்தி


வங்கிகள் இணைப்பு என்பது காலங் காலமாக பேசப்பட்டு வந்த விஷயம்தான் என்றாலும் இப்போது இந்த விவாதம் சூடுபிடித்திருக்கிறது. 1991-ம் ஆண்டு அந்நிய செலாவணி சிக்கலில் இருந்த சமயத்தில் நரசிம்மன் கமிட்டி வங்கிகள் இணைப்பினை பரிந்துரை செய்தது. அவ்வப்போது வங்கிகள் இணைப்பு என்ற
பேச்சு வந்து அடங்கும். கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வங்கிகள் இணைப்பு பற்றி அறிவித்தார்.


Image result for bank consolidation

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரத் தில் எஸ்பிஐ அதன் ஐந்து துணை வங்கி களையும், பாரதிய மகிளா வங்கியையும் இணைக்கும் நடவடிக்கையில் ஈடு பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளி யானது. இந்த அறிவிப்பு வெளியான உடனே வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தன.
வங்கி வாரியத்தின் தலைவர் வினோத் ராய் 27 பொதுத்துறை வங்கிகளை ஆறு பொதுத்துறை வங்கிகளாக மாற்ற வேண்டும் என்று கடந்த வாரத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து வங்கிகள் இணைப்பு என்பது முக்கிய விவாதப் பொருளானது. வங்கிகள் இணைப்பு சரியா, தவறா என்று ஆராய்வதற்கு முன்பு வங்கிகள் இணைப்புக்குச் சொல்லப்படும் காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

காரணம் என்ன?

சர்வதேச அளவில் முதல் 50 இடங்களில் உள்ள வங்கிகளின் பட்டியலில் இந்திய வங்கிகள் ஏதும் இல்லை. எஸ்பிஐ தன்னுடைய துணை வங்கிகளை இணைக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் 45-வது பெரிய வங்கியாக உருவாகும். இது தவிர பல நன்மைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர். காந்தி கூறியிருக்கிறார். வங்கிகள் இணைப்பு மூலம் வங்கிகளின் திறன் மேம்படும், ரிஸ்க் குறையும், பெரிய திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கும் திறன் உயரும், பெரிய வங்கியாக இருப்பதால் குறைந்த வட்டிக்கு சந்தையில் கடன் வாங்க முடியும் என்பது உள்ளிட்ட பல சாதகங்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இது இவர் கருத்து மட்டுமல்லாமல் வங்கித் துறை வல்லுநர்களின் கருத்தாகவும் இருக்கிறது. இவை நடக்கும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சியும் உயரும் என்ற கருத்தும் இருக்கிறது.

ஏன் கூடாது?

வங்கிகளை இணைக்கக் கூடாது என்று ஊழியர் சங்கங்களும் முன்னாள் ஊழியர்களும் கூறுகின்றனர். ஒரு புறம் பேமென்ட் வங்கி, சிறிய வங்கி என்று ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து வருகிறது. இன்னொரு பக்கம் வங்கிகளை இணைக்கிறது. இது என்ன லாஜிக் என்றே புரியவில்லை. அடுத்த பிரச்சினை மனிதவளம். வங்கிகள் இணைப்பால் உடனடியாக அதிகம் பாதிப்படைவது ஊழியர்கள்தான். தென் இந்தியாவில் இருக்கும் வங்கிகளுக்கும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இருக்கும் வங்கிகளுக்கும் கலாச்சாரம் வேறு. ஒருவேளை இணைப்பதாக இருந்தாலும் விருப்ப ஓய்வில் பலர் செல்ல வேண்டி இருக்கும். தவிர அதிகாரிகளின் பணியிடங்களில் குழப்பம் ஏற்படும்.
வங்கிகள் இணையும் போது இரண்டு பொது மேலாளர்கள் இருக்கும் பட்சத்தில் பெரிய வங்கியின் பொது மேலாளருக்குதான் பதவி உயர்வு கிடைக்கும். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால், இணைப்புக்கு பிறகு சில வருடங்களில் வங்கித் துறையின் வளர்ச்சி பாதிக்கும். தவிர மொத்தமாக ஆறு வங்கிகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் போட்டி இருக்காது. வங்கிகள் பெரிதாக பெரிதாக அதனை நிர்வகிப்பது கடினம். தவிர வங்கிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வெவ்வேறு. வங்கிகள் இணைப்புக்கான செலவு வீண்தான் என்று பொதுத்துறை வங்கியின் முன்னாள் பொது மேலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் தேவை?

இந்த விவகாரம் குறித்து வங்கித் துறை வல்லுநர் ஒருவரிடம் பேசினோம். வங்கிகள் இணைப்பு நல்லதா கெட்டதா என்பதை தாண்டி இது தேவையா என்ற விவாதம் முதலில் வரவேண்டும். வங்கிகள் இணைப்பு விஷயத்தில் வங்கி நிர்வாகம், அரசு, பணியாளர்கள், பொரு ளாதாரம் என பல முகங்கள் உள்ளன. அனைத்துத் தரப்பினையும் ஒரே சமயத்தில் திருப்திபடுத்த முடியாது.
வங்கிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும். மாநகரில் ஒவ்வொரு வங்கிக்கும் மண்டல அலுவலகங்கள், பல அடுக்கு அதிகாரிகள், ஒரே தெருவில் பல பொதுத்துறை வங்கிகள் எதற்கு? கிராமப்புற பகுதிகளில் வங்கி கிளைகள் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் நகர்ப்புற பகுதியில்? இணையம் பெருகிக் கொண்டே இருப்பதால் நகர்ப்புற பகுதியில் வங்கிகளுக்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது.
பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் வங்கிகளுக்கும் இடையே உள்ள வாராக்கடன் அளவினை பார்த்தால் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். இந்த நிலைமையில் பலவீனமான வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்கும் பட்சத்தில்தான் வங்கிகளின் நிதிநிலை அறிக்கையை சீர் செய்ய முடியும்.
இந்த வங்கிகள் இணைப்பு என்பது இன்றைக்கானது அல்ல. இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பங்குகளின் நிலைமை?

வங்கிகள் இணைப்பில் இன்னொரு முக்கியமான தரப்பு சிறு முதலீட்டாளர்கள். பெரும்பாலான சிறு முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவது வங்கிப்பங்குகள்தான். ஒவ்வொரு சிறு முதலீட்டாளரின் டீமேட் கணக்கிலும் ஏதாவது ஒரு வங்கிப் பங்கு இருக்கும். இந்த நிலைமையில் வங்கிப் பங்குகள் நிலைமை என்னவாகும் என்பது குறித்து மும்பையில் உள்ள பங்குச்சந்தை வல்லுநரிடம் பேசினோம்.
பொதுத்துறை வங்கிகளின் நிலைமை இன்னும் மேம்படவில்லை. இன்னும் ஓரிரு காலாண்டுகளுக்கு நிதி நிலை அறிக்கைகள் மோசமாகத்தான் இருக்கும். முன்பை விட நஷ்டம் அதிகரிக்காது என்றாலும் நஷ்டம் இருக்கத்தான் செய்யும். தவிர எந்த வங்கிகளை இணைக்கப்போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரிய வில்லை என்பதால், பொதுத்துறை வங்கிப் பங்குகளில் முதலீட்டை இப்போது தவிர்ப்பது நல்லது.




#தொடர்புடைய கேள்விகள்

ரிஸ்க் எடுக்க இருக்கும் முதலீட்டாளர்கள் நிகர வாராக்கடன் 4 சதவீதத்துக்கு கீழே இருக்கும் பங்குகளை வாங்கலாம். தவிர நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற வகையில் இந்த பங்குகள் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பங்குகளில் முதலீடு செய்து லாபம் கிடைத்தால் வெளியேறுவது நல்லது.
பொதுத்துறை வங்கிகளின் மீதான கட்டுப்பாட்டு உரிமையை மத்திய அரசுதான் வைத்துள்ளது. வங்கிகள் இணைப்புதான் சரியான வழி என்று மத்திய அரசு நினைக்கும் பட்சத்தில் இந்த நடவடிக்கையைத் தடுக்க முடியாது. எந்த ஒரு சரியான முடிவையும் தவறாக கையாளும் பட்சத்தில் பிரச்சினை மேலும் அதிகமாகும். அதுபோல வங்கிகள் இணைப்பு சரியான முடிவாக மத்திய அரசு நினைத்தாலும் கூட அதை எப்படி செயல்படுத்துகிறது, எந்தெந்த வங்கிகளை இணைக்கிறது, எவ்வளவு இடைவெளியில் இணைக்கிறது என்பது முக்கியம். எந்த நடவடிக்கையாக இருந் தாலும் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், வங்கிகள், என யாருக்கும் பாதகமில்லாத வகைகள் அமையவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
- karthikeyan.v@thehindutamil.co.in

ரா கடன் வங்கிகளுக்கு  பெரும் சவாலாக மாறிவிட்டன.இதை குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை ? இந்த நடவடிக்கைகள் திறன்மிக்கதாக உள்ளனவா?ஆராய்க 

வங்கிகள் இணைப்பு



இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி உலக அளவில் கணக்கிட்டால் ஒரு சிறிய வங்கியே ஆகும். அதனை விடப் பெரிய சுமார் 60 வங்கிகள் உலகில் உள்ளன.
ஆனால் உலகின் முதல் பத்து பெரிய வங்கிகளில் 3 வங்கிகள் சீனாவைச் சார்ந்தவை. எனவே நாமும் பெரிய வங்கிகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்து உருவாகி வருகின்றது.
பெரிய வங்கிகளை உருவாக்குவதற்காக சிறிய வங்கிகளை இணைப்பதா? வேண்டாமா? என்று யோசிக்கும் முன்பு இந்திய வங்கிகளின் இன்றைய நிலைமையை பற்றி அறிய வேண்டும்.
உலகம் முழுவதும் பொருளாதாரப் புயல் அடித்த போதும் கூட நமது வங்கிகளில் ஒன்று கூட சாய்ந்து கீழே விழுந்து விடவில்லை. பாரத ரிசர்வ் வங்கியின் சீரிய வழிநடத்தலின் படி சிறப்பாகவே செயல்பட்டன.
ஆனால் இன்றைக்கு வாராக் கடன் என்கின்ற புயல் நமது வங்கிகளைச் சற்றே அசைத்துப் பார்க்கின்றது என்பது மறுமுடியாத உண்மை.தொடர்ந்து இலாபம் ஈட்டிக் கொண்டிருந்த நமது வங்கிகள் வாராக் கடனுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ள காரணத்தினால் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பித்துள்ளன.
வாராக் கடன்கள் அனைத்தையும் தெளிவாக ஆராய்ந்து எந்தெந்த நிறுவனங்கள் கடன் பாக்கி வைத்துள்ளன. அவற்றால் கடனைத் திரும்பச் செலுத்த முடியுமா? முடியாதா? என்று பார்க்க வேண்டும்.
வசதி இருந்தும் கடனைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு கருத்துகளில் தான் பெரும்பாலான வங்கிகள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில்தான் வங்கிகளை இணைப்பதா? வேண்டாமா? என்ற கேள்வி எழுகின்றது.

ஏன் இணைக்க வேண்டும்?

1. உலக அளவிலான பெரிய வங்கிகளை நாம் உருவாக்குவதற்கு வங்கிகளை இணைக்க வேண்டும்.
2. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கிட்டத்தட்ட ஒரே கொள்கையோடு ஆனால் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. அதாவது ஒரே முதலாளியின் பல நிறுவனங்கள் ஒரே சந்தையில் செயல்படுகின்றன. அவற்றை ஒருங்கிணைத்து சில நிறுவனங்களாக மாற்றினால் அவற்றை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
3. நிர்வாகச் செலவு குறைந்து திறன் மேம்பாடு அதிகரிக்கும்.
4. அரசு மான்யங்களை வங்கிகள் மூலம் மக்களுக்கு அளிக்க இருப்பதால் பெரிய வங்கிகளாக இருப்பது வேலையை எளிதாக்கும்.

ஏன் இணைக்கக் கூடாது?

1.வங்கிகள் பெரிதாக மாறும் போது அவற்றின் மீதான ஆபத்தும் பெரிதாகி விடுகின்றது. நிறைய சிறிய வங்கிகள் இருந்து அவற்றில் ஒன்று திவாலாகும் போது ஏற்படும் பாதிப்பை விட சில பெரிய வங்கிகளில் ஒன்று திவாலாகும் போது ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்.
2.பெரிய நிறுவனங்கள்தான் சிறப்பாகச் செயல்படும் என்பதில்லை. சிறிய நிறுவனங்கள் எளிதாகத் தம்மை மாற்றிக் கொள்ள முடியும். நிர்வாக அடுக்குகள் குறைவான காரணத்தினால் விரைவாகத் திறம்பட செயல்படவும் முடியும்.
3. சிறிய வங்கிகள் பெரும்பாலும் நாட்டின் ஒரு மாநிலத்தில் அல்லது ஒரு பகுதியில்தான் நிறையக் கிளைகளைக் கொண்டுள்ளன. அவற்றால் அந்தப் பகுதி மக்களின் தேவைக்கேற்பத் திட்டங்கள் தீட்டிச் சிறப்புடன் செயல்பட முடியும்.


என்ன தீர்வு?

வங்கிகள் இணைப்பு என்பதில் சாதக அம்சங்களும் உண்டு. பாதக அம்சங்களும் உண்டு. இன்றைய நிலையில் எல்லா வங்கிகளும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. இப்போது வங்கிகளை இணைப்பது என்பது சிறிய பிரச்சினைகளைச் சேர்த்து பெரிய பிரச்சினைகளை உருவாக்குவதற்குச் சமம்.
ஆனாலும் வளரும் இந்தியப் பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்திப் பிடிக்க பெரிய வங்கிகள் அவசியம் தேவை.
நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஒரு பெரிய வங்கியைத் தற்போது உருவாக்க வேண்டும். உதாரணமாக பாரத ஸ்டேட் வங்கியை உலகின் முதல் பத்து வங்கிகளுக்குள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். அதற்குத் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
ஒரு ஐந்தாண்டு காலத்தில் நாம் அதனைச் சாதிக்க வேண்டும். அதற்காக ஒரு சில வங்கிகளை அதனுடன் இணைத்தாலும் தவறில்லை. அப்படிச் செய்யும் போது நாம் இப்போது இருக்கும் பல வங்கிகளை உடனே பாதிக்காமல் அதே நேரம் ஓர் உலக வங்கியையும் கொண்டிருப்போம்.
அந்தப் பயணத்தில் நாம் கற்கும் படிப்பினை நம்மை வங்கிகள் இணைப்பு தொடர்பான‌ அடுத்த கட்டத்திற்குத் தானாக வழிநடத்திச் செல்லும்.

 வ.முனீஸ்வரன்




பொதுத் துறை வங்கிகள் இணைப்பு: யாருக்கு என்ன நன்மை?


நன்றி : விகடன் 

டந்த 8-ம்  தேதி அன்று இந்தியா முழுக்க உள்ள வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள்.   சில சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க மத்திய அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை எதிர்த்துத்தான் இந்த வேலைநிறுத்தம் நடந்தது. இந்த இணைப்பின் மூலம் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட வேண்டும் என  மத்திய அரசாங்கம் விரும்புகிறது, வங்கி ஊழியர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்பவை முக்கியமான கேள்விகள்.

சமீப ஆண்டுகளாகவே பல பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது. மேலும், வங்கிகளுக்கு சுமையாக இருக்கும் வாராக் கடன்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பலவீனமாக இருக்கும் வங்கிகளை பலமான வங்கிகளுடன் இணைப்பது குறித்து விவாதங்கள் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. தற்போது இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் விவகாரங்களில் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிதி அமைச்சகத்தின் குழு, மீண்டும் வங்கிகளை இணைப்பது குறித்து பேசி வருகிறது.
முதல் கட்டமாக பாரத ஸ்டேட் பேங்க் தனது ஐந்து துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானர் அண்ட் ஜெய்ப்பூர் ஆகிய வங்கிகளை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், பொதுத்துறை வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் செயல்பாட்டிலும் லாபத்திலும் குறைந்து வருவதால், இந்த வங்கிகளையும் வேறு வங்கிகளுடன் இணைக்கும் பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.  
இந்திய மக்களின் வங்கிச் சேவை தேவையைப் பூர்த்தி செய்ய, பல இடங்களில் புதிய வங்கிக் கிளைகள் அவசியமாக உள்ள நிலையில், வங்கிகளை இணைப்பதும், கிளைகளைக் குறைப்பதும் சாத்தியமா, நிதி அமைச்சகமே எதற்காக இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்க வேண்டும், இதனால் வங்கிகளின் செயல்பாடும், பொருளாதாரமும் உயருமா, வங்கி ஊழியர்கள் பாதிப்படைவார்களா, வங்கிச் சேவை பாதிக்குமா என்கிற கேள்விகளை இக்ரா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கார்த்திக் சீனிவாசனிடம் கேட்டோம். விளக்கமான பதிலைச் சொன்னார். 
“வங்கிகளைப் பொறுத்தவரை, அவற்றின் செயல்பாடும், நிகர லாபமும் குறைவதுதான் வங்கிகள் இணைப்பது குறித்த விவாதத்துக்கு மூலகாரணம். ஆனால், இந்தப் பிரச்னை அனைத்து வங்கிகளுக்குமே உள்ளது. வங்கிகளின் மூலதனம், அவை நிர்வகிக்கும் சொத்துக்களின் தன்மை, லாபம் ஈட்டும் திறன் ஆகியவை வங்கிகளின் பொதுவான பிரச்னைகளாக உள்ளன.

இந்தப் பிரச்னைகள் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது, பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகமாகவே உள்ளன. மேலும், பொதுத்துறை வங்கிகளில் உள்ள ஊழியர்களுக்கான ஊதியம், சலுகைகள் போன்றவற்றில் அரசு எந்த சமரசமும் செய்ய முடியாது. அப்படி இருக்கையில் அவற்றின் லாபம் ஈட்டும் திறனை பொதுத்துறை வங்கிகள் மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. 


ஆனால், பொதுத்துறை வங்கிகள் நடைமுறையில் தனியார் வங்கிகளோடு போட்டி போட முடியாமல் திணறுகின்றன. இதன் காரணமாகவே அந்த வங்கிகளை சிறப்பாக செயல்படும் வங்கிகளுடன் இணைக்க திட்டமிடப்படுவதாக தெரிகிறது. 


இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும்  இதுவரை வெளிவரவில்லை என்றாலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தற்போது தனது துணை வங்கிகளை இணைக்க திட்டமிட்டுள்ளதைப் பார்க்கும்போது, வங்கிகள் இணைப்பு நடக்க வாய்ப்பு இருக்கும் என்றே நினைக்க வேண்டியுள்ளது.


பலவீனமாக இருக்கும் வங்கிகளை பலமான வங்கிகளுடன் இணைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும். அப்படி செலவுகளைக் குறைப்பதன் மூலம் வங்கிகளின் நிதிநிலை அறிக்கையில் வருவாய் கணக்கை உயர்த்திக்கொள்ள முடியும். 
ஆனால், இந்த வங்கிகள் இணைப்பினால் உடனடியாக எந்தப் பலனும் இருக்காது. நீண்டகால அடிப்படையில் வேண்டுமானால் பலன் இருக்கலாம். அதுவும் வங்கிகள் இணைக்கப்பட்ட பிறகு ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும், வங்கிகளும் எடுக்கும் நடவடிக்கைகளிலும், செயல்பாட்டிலும்தான் எதிர்பார்த்த பலனும் லாபமும் கிடைக்கும். 

இப்படி சொல்வதற்கு காரணம், வங்கிகள் இணைப்புக்குப் பிறகு அவை சந்திக்க வேண்டிய சவால்கள் நிறையவே உள்ளன. வங்கி ஊழியர்கள் மாற்றம், அவர்களுக்கான ஊதிய நிர்ணயம், எல்லா ஊழியர்களுக்கும் வேலை உறுதி என்கிற உத்தரவாதம், எந்த வங்கியை எந்த வங்கியோடு இணைப்பது என்று விவாதம் நீண்டுகொண்டே இருக்கும்.
1969-லிருந்து இன்று வரை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் துறையில் 34 இணைப்புகள் நடந்துள்ளன. அதில் குறைந்தபட்சமாக 25 இணைப்புகள் தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டவை. ஆனால், கடந்த 25 வருடங்களில் தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளை மிஞ்சும் வகையில் அசூர வளர்ச்சியைக் கண்டுள்ளது. அவற்றின் வளர்ச்சிக்குக் காரணம், மக்களைச் சென்று சேர அவை எடுத்த பல்வேறு நடவடிக்கைகள்தான். 

அதனால் தற்போது பொதுத்துறை வங்கிகள் புதிய அவதாரம் எடுக்கத் தயாராக வேண்டி இருக்கிறது. அவை தங்களின் செயல்பாட்டிலும், மக்களைச் சென்றடைவதிலும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.  கிராமப்புறங்களில் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிக் கிளைகள்தான் உள்ளன. நகர்ப்புறங்களில் மட்டுமே தனியார் வங்கிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள பொதுத் துறை வங்கிகள் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு வங்கி, சேமிப்பு, கடன் குறித்து விழிப்பு உணர்வு தர வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தும் திட்டங்களைத் மக்களிடையே தீவிரமாக கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தகுதி யான மனித வளங்கள் மிகவும் அவசியம்.


வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், வங்கியில் கடன் வாங்கு பவர்களின்  எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் வங்கிகளின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. பொதுத்துறை வங்கிகள் அவற்றை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன் இருக்கும். இது போன்ற இணைப்பு களுக்கும் தேவை இருக்காது” என்று கூறி முடித்தார்.
பொதுத் துறை வங்கிகள் இணைப்பு குறித்து விரிவான விவாதம் தேவை என்பது மட்டும் இப்போது தெளிவாக தெரிகிறது


வங்கி சீர்த்திருத்தம் மற்றும் இந்திய வங்கிகள் குறிந்து தெரிஞ்சுக்குவோம்


இந்திய வங்கி : இந்திய வங்கி உலக அளவில் 5 வது மிகப்பெரிய வங்கியாகும. இந்திய வங்கி அமைப்பு 2020இல் உலக அளவில் மூன்றாவது இடம் பெரும். இந்தியன் வங்கிகள் மதிப்பு 1 டிரில்லியன் மதிப்பு கொண்டது ஆகும். இந்திய அராசானது வங்கி மயமாக்களை அதிகரிக்க திறம்பட செயல்பட விரும்புகின்றது. இந்தியாவில் உள்ள வங்கி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஜன்தன் யோஜனாவை அரசு அறிமுகம் செய்தது. ரொக்கம் இல்லா அக்கவுண்ட் ஒபன் செய்து வங்கி பயன்பாட்டை அதிகரிக்க திட்டங்கள் தீட்டி வருகின்றது. இந்திய வங்கி வராறு மிகப்பெரியது இந்தியாவில் அரசு மட்டுமின்றி தனியார் வங்கி சேவை, அயல்நாட்டு வங்கி சேவைகள் பெருகிவருகின்றன.

வங்கி வரலாறு : இந்தியாவில் 1806 இல் கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவில் வங்கியினை ஆரம்பித்தது. 1840 முதல் 1843இல் மேற்கூரிய வங்கிகள் மும்பை , சென்னையில் விரிவாக்கம் செய்தது. 1921இல் மேற்கூரிய வங்கிகள் இணைப்பு அதனை இம்பீரியல் வங்கி என அழைத்தனர். இது கமர்சியல் வங்கியாக செயல்பட்டு வந்தது. 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியாக மாற்றமாகி செயல்பட்டு வருகின்றது

வங்கிகள் நாட்டுடமையாக்கம்: அரசானது 1969 வரை வங்கிகள் நகரங்களின் மீது கவனம் செலுத்தின. வங்கிக் கடன்கள் அனைத்து நகரங்களுக்கும் கொடுக்கப்பட்டது. உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் விவசாயம், சிறு தொழில் , மண்டல வளர்ச்சி என பகிர்ந்தளித்தது முன்னேற்ற முயற்சிகளை செய்து வந்தது. நாட்டின் வளர்ச்சிக்காக நாட்டின் 80% வங்கிகள் நாட்டுடமையாக்க திட்டமிட்டு 1969இல் ஜூலை மாதம் நாட்டுடமையாக்கப்பட்டது. வங்கிகளின் முறையாக செயல்படுத்தி ஊரக மற்றும் வளரும் நகரங்களின் வங்கி கடன் விவசாயம் மற்ற உற்பத்தி துறைகளுக்கு வழங்க திட்டமிட்டது. சேமிப்புகளை மக்களிடத்தில் அதிக அளவில் ஏற்ப்பட்டது. 1980 ஆம் ஆண்டு ஆறு வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

1991 பொருளாதாரம் : 1991 இல் ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சமாளிக்க இந்தியா சமாளிக்க தினரி வந்தது. ஐஎம்எப் இந்தியாவுக்கு வெளியிலிருந்து கடன் வாங்குதலுக்கு உதவவில்லை. இந்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் செய்ய முயற்சித்து 1991இல் வங்கி சீர்திருத்தம் கொண்டு வந்தது. அதனை நரசிம்மன் கமிட்டி ஒன்று, நரசிம்மன் கமிட்டி என்று இருமுறை   வேறு வேறு சூழலில் கொண்டு வரப்பட்டது 

நரசிம்மன் கமிட்டி : 1991இல் இந்தியா வங்கி சீர்திருத்தம் செய்ய நரசிம்மன் தலைமையில் வங்கி சீர்த்திருத்த கமிட்டியினை  உருவாக்கியது. 1991இல் வங்கி சீர்திருத்த வேலையில் இந்தியாவில் உற்பத்தி வீழ்ச்சி, லாப இழப்பினை வங்கிகள் சந்தித்தன. 1998 நரசிம்மன் கமிட்டியினை இந்தியா வங்கி சீர்த்திருத்திற்காக இரண்டாவது முறையாக நியமித்தது. 1998இல் உலக அளவில் வங்கி வளர்ச்சியை உறுதிப்படுத்தி வங்கிகளின் செயல்பாட்டை வலிமைப்படுத்தியது. 1991 முதல் 1997 வரை ரொக்க இழப்பு வீதத்தினை வங்கிகள் சந்தித்தன. வங்கிகளின் ரொக்க இருப்பு வீதத்தை குறைத்து அறிவித்தது. மேலும் தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. வங்கிகளை சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து முடிவுகளை எடுக்கவும் உரிமை அளிக்கப்பட்டது.

சமிபத்திய வங்கி செயல்பாடுகள்: அரசு வங்கிகள் அதிகச் சுயாதிகாரத்துடன் செயல்பட வேண்டும், அரசுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கிகளை இணைத்து சேவையை விரிவுபடுத்துவதுடன் வெளிநாடுகளிலும் சேவையைத் தொடங்க வேண்டும் என்றெல்லாம் வங்கித் துறையைச் சீரமைக்க நியமிக்கப்பட்ட குழுக்கள் முன்பே வலியுறுத்தியுள்ளன.

மேலும் அறிந்துகொள்ள (தமிழில்)



இணைப்புகளால் ஏற்றம் பெறுமா வங்கித் துறை?


நன்றி : வணிக வீதி 


விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மூன்று வங்கிளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வாராக்கடன் மீட்பு நட வடிக்கையாகவும், கடன் வசதிகளை அதிகரிக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
இந்த இணைப்பின் மூலம் நாட்டின் 3-வது மிகப்பெரிய வங்கியாக புதிய வங்கி உருவாகும். குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிக்கு அடுத்து பெரிய, ஸ்திரமான வங்கியாக உருவாக உள்ளது.
தற்போது, வங்களின் கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கிறது, இதனால், கார்ப்பரேட் துறை முதலீடு பாதிக்கிறது. அதிகமான வராக்கடனை அளித்து, வங்கிகளின் சொத்துகள் குறைந்து வருகின்றன. இந்த மூன்று வங்கிகளையும் இணைப்பதன் மூலம் வங்கிச் செயல்பாடுகள் வலிமை அடையும் என அறிவிப்பின்போது குறிப்பிட்டார் ஜேட்லி.
இந்த இணைப்பினால் 3 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும், முக்கியமாக வங்கியின்  பெரும்பாலான பங்குகள் அரசின் கைவசமே இருக்கும் என்கிற குறிப்பினையும் ஜேட்லி அளித்துள்ளார்.
இணைப்பு அவசியமா?
பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனால் தத்தளித்து வரும் நிலையில் அதிலிருந்து மீட்கும் நடவடிக்கையாக மூன்று வங்கிகளையும் இணைக்க அரசு திட்டமிடுகிறது. கடந்த ஆண்டில் இதே காரணத்தை முன்வைத்து பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்தாலும், இந்த இணைப்பின் மூலம் கிடைத்த ஆதாயத்தை விட, இழப்புகளே அதிகம் என்கின்றன விவரங்கள். இந்த நிலையில்தான் அடுத்த கட்டமாக விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மூன்றையும் இணைப்பதற்கு அரசு திட்டமிடுகிறது.
இந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு என தனித் தனியான கட்டமைப்பை கொண்டுள்ளன. இவற்றின் பணிக் கலாச்சாரத்தை ஒன்றாக இணைப்பது நிர்வாக ரீதியாக சவாலானது. பேங்க் ஆப் பரோடா வங்கி குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையான  சந்தையை வைத்துள்ளது. தேனா வங்கிக்கு தெற்கிலும் வடக்கிலும் 1,557 கிளைகள்தான் உள்ளன. ஆனால் மேற்கு பகுதியில் மட்டும் 2,205 கிளைகளை வைத்துள்ளது.  இந்த நிலையில் புதிதாக உருவாகும் வங்கி இந்த கட்டமைப்பு பலத்தை இழக்கும். விஜயா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர நாராயணன் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுமார் 500 வங்கி கிளைகளை மூடவேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்துள்ளார்.
முதலில் தேனா வங்கியும் விஜயா வங்கியும் இணைக்கப்பட்டு, அதன் பின்னர் பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த வங்கிகளின் கோர் பேங்கிங் மென்பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மென்பொருளை கையாளுகின்றன. இதனால் சிக்கல் உருவாகும் என்கிறது கோட்டக் இன்ஸ்ட்டியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம். வங்கிகளின் இணைப்பு குறித்து அரசு அறிவித்த இரண்டு நாட்களில் மும்பை பங்குச்சந்தையில் வங்கித்துறை பங்குகள் மிகப் பெரிய சரிவை கண்டுள்ளன.
குறிப்பாக பட்டியலிடப்பட்டுள்ள 22 வங்கிகளின் சந்தை மதிப்பில் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்புஏற்பட்டது. இதுபோன்ற இணைப்பு நடவடிக்கைகள் வரும் காலத்தில், இதர வங்கிகளிலும் நடக்கலாம் என்கிற அச்சம் முதலீட்டாளர்களிடம் உருவாகியுள்ளது. இணைக்கப்படும் வங்கியின் கடன் சுமை, தாங்கள் பங்கு வைத்துள்ள வங்கியின் கடன் சுமையோடு சேர்ந்தால் வங்கியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்பது முதலீட்டாளர்களின் கணிப்பு. இதனால் முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள வங்கிப் பங்குகளை விற்கத் தொடங்கி உள்ளனர். இதனால் சம்பந்தபட்ட வங்கிகளின் சந்தை மதிப்பு சரிந்து வருகிறது.
திவால் நடவடிக்கை தீர்வுகள்
இந்திய வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் மதிப்பு தற்போது 21000 கோடி டாலர் (14,70,000 கோடி ரூபாய்) என தங்களுடைய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. இதனால் நீண்ட காலமாக உள்ள வாராக்கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி பல வழிமுறைகளை வங்கிகளுக்கு அளித்து வருகிறது. குறிப்பாக திரும்ப பெறக்கூடிய நிலையில் உள்ள ரூ. 3.6 லட்சம் கோடி வாராக் கடனை வசூலிப்பதற்கான மறுசீரமைப்பு திட்டங்களுக்கு வங்கிகளை வலியுறுத்தியுள்ளது.
இதன்படி வாராக்கடனை வசூலிக்க நிறுவனங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவதும், நிறுவனத்தை மறுசீரமைத்து கடனை வசூலிக்கவும் திவால் தீர்வுகள் சட்டப்படி (Insolvency and Bankruptcy Code)  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீரமைக்க முடியாத நிறுவனமாக இருந்தால் வேறு நிறுவனங்களிடம் விற்று இருக்கும் கடனை வசூலிக்கவும் வழிகாட்டப்பட்டுள்ளது. இதனால் முன்பைவிட தற்போது இணைப்பு மற்றும் கையகப்
படுத்தல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. இதன் மூலம் வங்கிகளின் வாராக்கடன் அழுத்தம் குறைந்து வருகிறது. 2013-ம் ஆண்டு 3500 கோடி டாலருக்கும் குறைவான இணைப்புகளே நடந்தன. ஆனால் 2018-ம் ஆண்டில் இதுவரை 11000 கோடி டாலருக்கு மேல் இணைப்பு நடவடிக்கைகள் நடந்துள்ளன. இந்த போக்கு தொடரும் என்கிறது பிடபிள்யூசி நிறுவனம்.
இதன்படி வாராக்கடன் அதிகம் வைத்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், முகேஷ் அம்பானியின் ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன், எஸ்ஸார் ஸ்டீல், பூஷான் ஸ்டீல், ருச்சி சோயா என பட்டியல் தொடர்கிறது. தற்போது ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் மோர் சில்லரை வர்த்தக அங்காடியும் இந்த பட்டியலில் இணைகிறது.
விஜயா வங்கி தனது வாராக்கடனை குறைத்து வருகிறது. ஜனவரி-மார்ச் காலாண்டில் 6.34 சதவீதமாக இருந்த வாராக்கடனை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.19 சதவீதமாக குறைத்துள்ளது. தேனா வங்கி தொடர்ச்சியாக வாராக்கடன் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் 22.69 சதவீத கடனை 22.04 சதவீதமாக குறைத்துள்ளது.
வங்கியல்லாத நிறுவனங்களின் வளர்ச்சி பல்வேறு வகையிலும் மோசடிகள், வாராக்கடன்களால் பொதுத்துறை வங்கிகள் திணறும் நிலையில்,  ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும்  அபாரமான வளர்ச்சியில் உள்ளன. உலகின் மிக மோசமான வங்கிகள் கொண்ட இந்தியாவில்தான், உலகின் மிக சிறப்பான வங்கிகளும் உள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களில், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ்  வங்கிகளின் வளர்ச்சி 47 சதவீதமாக உள்ளது என சுட்டிக் காட்டுகிறது. மூன்று வங்கிகளின் இணைப்புக்கு பின்னர் இந்த வங்கிகளின் சொத்து மதிப்பு உயரும். ஆனால் அதே அளவுக்கு சிக்கல் உருவாகும் என்கிறது கோட்டக் ஆய்வு.  தேனா வங்கியின் நிகர மதிப்பு புதிய வங்கியின் சொத்து மதிப்பினை உயர்த்தும். அதேநேரத்தில் பேங்க் ஆப்பரோடாவும், விஜயா வங்கியும் சிறந்த கடன் கட்டமைப்பை வைத்துள்ளன.
ஆனால் இணைப்புக்கு பின்னர் ஒட்டுமொத்த வராக்கடன் ரூ.80,000 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். இதை வசூலிப்பதற்கே புதிய வங்கி முன்னுரிமை அளிக்கும். இதனால் கார்ப்பரேட் கடன் அளிப்பதும் சவாலானது.  இணைப்புக்கு பின்னர் வங்கியின் கடன் வர்த்தகம் 6.4 சதவீதமாகவே இருக்கும்.
தொழில்சங்க அச்சம்
மத்திய அரசு செய்யும் மூலதன உதவிக்காக இந்த இணைப்பு நடவடிக்கை அவசியமாக இருக்கலாம். ஆனால் வங்கிகளின் சொத்து மதிப்பில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்கின்றன தொழில்சங்கங்கள். எஸ்பிஐ இணைப்பினால் சாதகமான அம்சங்கள் எதுவும் நடக்கவில்லை. அதேநேரத்தில் வாராக்கடன் அதிகரித்துள்ளது, ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர், வர்த்தகம் குறைந்துள்ளது என தொழில்சங்கங்கள் கூறுகின்றன.
அதே அச்சம் இப்போதைய இணைப்பிலும் இருப்பதாக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆக, இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கி அமைப்பிலும் சிக்கல் இல்லை என்பதுடன், ஒவ்வொரு தனித்த வங்கியினுடைய நிர்வாகம் சார்ந்த சிக்கலாகவே இருக்கிறது என்பதும் உண்மை. இதை புரிந்து கொண்டால் வங்கி கட்டமைப்பை சரிசெய்ய இணைப்பு நடவடிக்கை தீர்வாக இருக்குமா என்பதையும் புரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN